politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

29.3.10

சொகுசு பொருளாம் பெட்ரோல்..


நம் நாட்டை ஆண்டு வரும் ஏழை பங்காளர்களுக்கு நாட்டை ஆழ காசு வேண்டும் என்றால் அவர்கள் செய்யும் ஒரே காரியம் பெட்ரோலின் மீது வரியை உயர்த்துவது மட்டுமே... வரும் ஏப்ரல் முதல் நாளில் இருந்து நமது நாட்டில் நமக்கு மிகவும் பழகி போய் விட்ட பெட்ரோல் விலை ஏற்றம் அமுலுக்கு வருகிறது... பெட்ரோலின் விலை சர்வதேச சந்தையில் உயருவது என்னவோ உண்மை தான், ஆனால் சில பதில் வராத கேள்விகள் இந்த நாட்டில் உலா வந்து கொண்டு தான் இருக்கிறது... அவற்றில் சில இதோ...
*நம் நாட்டில் உற்பத்தி ஆகும் பெட்ரோலை என்ன விலை கொடுத்து வாங்குகிறார்கள்?
*அரசு எரிவாயு நிறுவனங்கள் விளம்பரத்திற்காக என் செலவு செய்கிறார்கள்?
*கிரிக்கெட் போட்டி நடத்துவதால் இவர்கள் என்ன லாபத்தை எதிர் பார்க்கிறார்கள்?
*நம் அண்டை தேசமான பாகிஸ்தானில் பெட்ரோலின் விலை என்ன?
*பாகிஸ்தானில் நாம் வாங்குவதை விட குறைந்த விளைக்கா வாங்குகிறார்கள்?
*அவர்கள் நாட்டு என்னை நிறுவனங்களக்கு நம்மை விட அதிக நஷ்டம் வருகிறதா?
*கடைசியாய், பெட்ரோலின் மீது இவ்வளவு அதிகமான வரி விதிப்பதற்கு காரணம் அது என்ன சொகுசு பொருளா?

28.3.10

மோடி வித்தை


ஒரு இந்திய குடிமகன் எப்படி வாழக் கூடாது என்பதற்கு ஒரு வாழும் உதாரணமாய் இருக்கும் குஜராத் முதல்வர் மோடிக்கு, சிலர் வக்காலத்து வாங்குவது நெஞ்சை உறுத்துகிறது... ஒரு வேளை இவர்களின் தாய் வயிற்றில் இருந்து இவர்களையும் வெட்டி எடுத்து எரித்திருந்தால் இன்று வக்காலத்து வாங்க வந்திருக்க முடியாது அல்லவா....
அவர்கள் செய்ததற்கு நாங்கள் பழி வாங்கினோம் என்று சொல்வதினால் மட்டுமே, நீதி நிலை நாட்டப் படுவதில்லை... பழிக்கு பழி என்பது ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சருக்கு தோன்றி இருக்க கூடாது...
அதே எண்ணம் அவரால் கொல்லப் பட்டவர்களுக்கு இருந்திருந்தால் இன்று அவர் சட்டத்தின் முன்னாள் நின்றிருக்க வேண்டியதில்லையே...

27.3.10

பென்னாகரம், மல்லையாவும் மற்றும் அரசும்


கொஞ்சம் உற்று பார்த்தால் தலைப்பே கதை சொல்லும்... இதோ இன்னுமொரு ஜனநாயக படுகொலை நடக்க போகிறது... பென்னாகரம் இடை தேர்தல் சொல்லும் சேதி என்ன? மக்கள் பணத்திற்காக தங்கள் ஓட்டு உரிமையையும் விற்கும் நிலைக்கு வந்து விட்டார்கள், ஆக இந்த அரசாங்கம் ஆனது லெனின் கூறுவது போல பணக்காரர்களை மட்டுமே காப்பாற்ற உருவாக்க பட்டது என்பது மறுபடியும் மறுபடியும் வெட்ட வெளிச்சம் ஆகி கொண்டிருக்கிறது... மல்லய்யா இதற்க்கு முன் எந்த தவறுமே செய்யாதவர் போலவும், அவசரத்திற்காக மட்டுமே விதிமுறைகளை மீறினார் என்றும் பரப்ப படுவது போலவே, நாளை பென்னாகரம் மக்கள் தங்களை விரும்பி தேர்ந்தெடுத்ததாக கதை விட போகிறார்கள்..
பணம் படைத்தவர்கள் செய்யும் தவறுகள் ஆதாரம் இருந்தும் அவர்கள் இறந்த பிறகே அவர்களுக்கு தண்டனை பிறப்பிக்க படும், ஆனால் சாதாரண மனிதன் ஆதாரம் இல்லை என்றாலும், நிரபராதியாகவே இருந்தாலும் சட்டத்தால் தண்டிக்க படுவான்... ஆக பழைய தமிழ் சினிமா டயலாக் படி, " இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்" என்று விட்டு விட முடியாது, மாற்றத்தை நோக்கி ஆணிவேர் ஊடுருவிக் கொண்டே இருக்கும் என்று இந்த பக்கத்தில் தெரிவித்து கொள்கிறேன்...

26.3.10

வெளிச்சத்திற்கு வந்த போலி மருந்துகள்


காலம் காலமாய் நம் நாட்டில் உலவி வந்துள்ள போலி மருந்துகளின் ஒரே ஒரு துளியை மட்டுமே பிடித்து இருக்கிறார்கள். நம் நாட்டில் உலவும் மருந்துகளில் ௪0% போலி மருந்துகள் தான் என்று அப்பொழுது ஜனாதிபதியை இருந்த அப்துல் கலாம் அவர்கள் தனது உரையிலே பதிவு செய்து இருக்கிறார். சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து அதன் ஒரு நுனியை மட்டும் இப்பொழுது வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். மேலும் இதன் ஒரு பகுதியை இயங்கி வரும் மருந்து நிறுவனங்களையும் சோதனை செய்வதன் மூலமே இந்த போலி மருந்துகளின் நடமாட்டத்தை குறைக்க முடியும் என்பது நிபுணர்களின் கருத்தாகும்.
மொத்தத்தில் நம் நாட்டில் மருந்து துறையானது சுகாதார துறையின் கீழ் வராமல், எதோ ஒரு பெட்ரோல் மற்றும் ரசாயன துறையின் கீழ் வருவதினாலேயே இந்த அளவுக்கு ஊழல் மலிந்திருக்கிறது... இவை அனைத்தும் அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன் தான் இத்தனை ஆண்டுகளாய் நடந்து வந்திருக்கிறது என்பது அனைத்து மக்களுக்கும் தெரியும்... இந்த நிலையை மாற்ற மக்கள் அனைவரும்
௪௯ ஓ வை பதிவு செய்வதை தவிர வேறு வழி என்பது இல்லை....

25.3.10

ஆராய்ச்சி செய்த நித்யானந்தம்.


குழந்தை தனம் மாறாத சிறுவர்களின் மனதில் கடவுள், இறைவன் என்ற பெரிய பெரிய சித்தாந்தங்களை மூளையில் திணிப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை நித்தியானந்தன் என்னும் ராஜசேகரன் உலகத்துக்கு காட்டி விட்டான். கடவுள் என்ற ஒரு சிந்தனை எவ்வளவு பெரிய மாயை என்பதை கீதையின் வழியே புரிந்து கொண்டு ஒரு உண்மையான நாத்திகனாய் மாறியதை, எவ்வளவு நாளைக்கு தான் அவனால் பொய்யும் புரட்டாலும் ஊரை உலகத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியும். பொய் என்பது குடத்தில் இட்ட விளக்கு போல, எவ்வளவு தான் மூடி வைத்தாலும் அதன் வெளிச்சம் வெளியே வந்தே தீரும் என்பது மறுபடியும் உண்மையாய் மாறியிருக்கிறது. எத்தனை ஆனந்தாக்களும், சங்கராச்சாரியார்களும், தேவநாதன்களும், கல்கி பகவான்களும், மாட்டிக் கொண்டு முழித்தாலும் நம் தமிழ் மக்கள் வேறு ஒரு சாமியாரிடம் கண்டிப்பாய் சரண் அடைவதை தவிர வேறு வழி அற்றவர்களாக உள்ளனர். ஒரு பொய்யை பல முறை சொன்னால் உண்மையாகும் என்ற கோயபல்ஸ் தத்துவத்துடன் கண்டிப்பாய் ஒரு பொய்யை பல பேர் சொன்னால் உண்மையாகும் என்ற ஒன்றையும் இணைத்து கொள்ளவேண்டும்...