Pages

22.7.11

அலட்சியம் - சாமர்த்தியம் - சதி

சிங்கூர்... 

இடது சாரிகளின் அலட்சியம்..
மம்தாவின் சாமர்த்தியம்...
வலது சாரி ஊடகங்களின் சதி...

இடது சாரிகளின் வீழ்ச்சிக்கு வித்திட்ட சிங்கூர் எப்படி திரிணமுல் கட்சிக்கு கல்லறை ஆகியிருக்கிறது என்று பல்வேறு ஊடகங்கள் கட்டுரை வரைய தொடங்கி விட்டன..
இரட்டை வேடம் போட எடுத்த நாடகம், வெற்றியில் முடிந்து விட அடுத்து எப்படி வேஷம் கட்டுவது என்பதில் குழப்பம்...
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை... 
இப்படி பட்ட விஷயம் என்றுமே குழப்பம் தான்...

இதில் குழம்ப ஒன்றுமே கிடையாது,
உங்களை நம்பி மக்கள் வாக்களித்து உள்ளனர், 
ஆகையால் அவர்களின் நலன் எதுவோ அதை செய்யுங்கள்...
மக்களின் ஏழ்மையை ஒழித்துக் காட்டுங்கள், பொதுவுடைமை சிந்தனைகளை நீங்கள் கையில் எடுத்து ஆட்சி செய்தாலும் தவறில்லை...
அப்படி மக்கள் நலன் மேல் அக்கறை இல்லாமல், மற்ற அரசுகள் போல் பணம் சம்பாதிக்க இறங்கினால், உங்கள் கனவுகள் கனவுகளாகவே இருக்கும்...