Pages

9.8.11

தள்ளி வைக்கப் பட்டுள்ள சந்தோசம்..

எழுபது நாட்கள் நடந்த நாடகம் உச்ச கட்டத்தை நெருங்கி தமிழகமே மற்ற அனைத்து கவலைகளையும் தள்ளி வைத்து விட்டு ஆனந்தத்தில் கொண்டாடி கொண்டிருக்கிறது..

கலைஞர் நிறைவேற்றிய சட்டத்தில் இருக்கும் ஓட்டையை அம்மா கவனிப்பதற்கு இத்தனை நாளாகியிருப்பது அவரது அரசின் நிர்வாக சீர்கேட்டை சுட்டி காட்டுகிறது..

எல்லோரும் சரி சமமான கல்வியை பெறப் போகிறார்கள் என்று ஆனந்தம் கொண்டிருக்கும் வேளையில் மிகவும் அமைதியாக, தனியார் பள்ளிகள் கொள்ளை அடிப்பதற்கு ஏதுவாக, ஒவ்வொரு வகுப்புகளுக்கும் தனியார் புத்தகங்களின் தொகுப்பை வெளியிட்டிருக்கிறது அரசு... 

உச்ச நீதிமன்றம் இதோ அதோ என்று சொல்லி ஒரு வழியாக சட்டத்தில் இருக்கும் ஓட்டையை அம்மாவுக்கு காட்டி விட்டார்கள் போல் தெரிகிறது...

இன்னும் வீண் பிடிவாதம் பிடிக்காமல் அனைத்து மாணவர்க்கும் ஒரே புத்தகமாக தந்து நீதியை நிலை நாட்டப் போகிறார்களா? அல்லது தனியார் கல்வி நிறுவனங்களின் கொள்ளைக்கு துணை நிற்க தனியார் நிறுவனங்களின் புத்தகத்தையும் பரிந்துரைக்க போகிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்பது என்று என் சந்தோசத்தை பத்து நாட்களுக்கு தள்ளி வைக்கிறேன்..

சமச்சீர் கல்வி சட்டம் 

2,3,4,5,7,8,9,10 வகுப்புகளுக்கான புத்தகங்களின் அட்டவணை..

1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கான புத்தகங்களின் அட்டவணை..