Pages

27.9.11

49 'O'


49  ஓ போடு என்று பதிவு போட்டவுடன் முக்கால்வாசி பதிவர்கள் சொன்ன பதில் 49 ஓ விர்க்கு ஆதரவாக இல்லை... 

வேட்பாளர்கள் பரிச்சயமானவர்கள், 
இருப்பதில் நல்லவருக்கு ஓட்டு போடலாமே, 
கட்சிகளை விட ஆட்களுக்கு முக்கியத்துவம் தரும் தேர்தல், 
தைரியமா போட்டு விட முடியுமா? 
எந்த நபர் நல்லவரோ அவருக்கு வாக்களிக்கலாம்..

இவர்களுக்கு பதில்களை பின்னூட்டம் இட்டாலும், ஏன் இதற்கான பதிலை தனியே ஒரு பதிவை போட கூடாது என்ற யோசனையை அமுல்படுத்தி இருக்கிறேன்...

ஒரு தேர்தலை சந்திப்பதற்கு குறைந்த பட்சம் ஒரு வாக்காளருக்கு இரண்டு லட்சம் செலவாகும் என்பது என் எண்ணம்? இல்லை அவர் பத்தாயிரம் ரூபாய் தான் செலவு பண்ணுவார் என்று சொன்னால் அதுவும் பணம் தானே என்பது என் பதில்...

அதனால் தான் தேர்தல் செலவுகளை கட்சியே ஏற்றுக் கொள்ளும் பொதுவுடைமை கட்சிகள் தனித்து நிற்பதற்கு அவ்வளவு யோசிக்கின்றன... 

இவ்வளவு செலவு செய்த தேர்தலில் வெற்றி பெரும் ஒருவர் அந்த பணத்தை கிணற்றில் போட்ட கல் என்று எடுத்துக் கொள்வாரா அல்லது திரும்ப எடுக்க முயற்சி செய்வாரா? 

திரும்ப எடுக்க முயற்சி செய்யும் நபர் எங்கிருந்து திரும்பி எடுப்பார், நமது வரி பணத்தில் தானே கை வைப்பார்...

அப்படி கிணற்றில் போட்ட கல் என்று எடுத்துக் கொள்ளும் வேட்பாளர் யாராவது இருந்தால் அவர் காலடி தொழுகிறேன்.. அவருக்கே உங்கள் ஓட்டுக்களை போடுங்கள்... 

2006 உள்ளாட்சி தேர்தல் நிலவரத்தை தெரிந்து கொள்ள