Pages

16.10.11

மால்குடி சித்தன்

எனக்கு வந்த குறுஞ்செய்தி..

நேராக நிற்கும் மரம் தான் முதலில் வெட்டுப்படும் ஆகையால் நேர்மையாக இல்லாமல் கொஞ்சம் வளைந்து கொடு...

என் கேள்வி என்ன என்றால்,

நேராக நிற்கும் மரம் வெட்டப் படுவது நல்ல பலகையாக, மரச்சாமான்கள் செய்து ஆண்டாண்டுகாலம் பயன் படத்தானே... மாறாக வளைந்து நெளிந்த மரங்கள் விறகாக பயன்பட்டு எரிந்து சாம்பலாக தானே போகிறது... 

ஆண்டாண்டுகாலம் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் நேரான மரமாக வெட்டுபடலாமே?

இதுக்கு என்ன சொல்ல போறீங்க

குறிப்பு:
கூடங்குளம் போராட்டம் வெளிமாநில மக்களை அவர்கள் ஊருக்கு திரும்பி போக வைத்திருப்பதால் சில ஊடகங்கள் வந்தாரை வாழ வைக்காதா தமிழகம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர், அதே ஊடகத்தில் வெளிமாநிலத்தவர் சொன்னது, இரண்டு மாதம் சம்பளம் பாக்கி இருந்தும் வேறு வழி இல்லாமல் திரும்பி செல்கிறோம்... இரண்டு மாத சம்பளம் கொடுக்காதது தமிழகத்தின் தவறா?