Pages

11.11.11

நண்பரின் கடிதம்

மக்கள் சக்தி கட்சியின் பொறுப்பாளர்களில் ஒருவரான என் தோழர் அனுப்பிய கடிதம் உங்கள் பார்வைக்கு.. 

-------------------------------

சாதரண மக்களின் உயிர்களையும் உண(ர்)வுகளையும் ஒடுக்க / அழிக்கத் துடிக்கின்ற பிரதிபலனுக்காய் இயங்குகின்ற பிரதிநிதித்துவ சனநாயகம், பார் உயிர்கள் அனைத்தும் என்றென்றும் வளமாய் வாழ வழித்தேடி போராட்டக் களத்தில் இருக்கும் மக்கள் சனநாயகத்தின் முன் மண்டியிடும் நாள் வெகுதொலைவில் இல்லை!

மத்திய அரசே! மாற்றான் கைகூலியே!

அணுவிற்கு எதிரான எங்கள் போராட்டம்
அணுகுண்டு போட்டு ஒடுக்க நேர்ந்தாலும்
அனுதினமும் களமாடி உங்கள் கடைசிசிசி....
அணுகுண்டை உண்டாவது எம்மவர்க்கும்

அடுத்த தலைமுறைக்கும் ஆவன செய்யாது அயரமாட்டோம்!
அணு உலையை மாய்க்கும்வரை ஓயமாட்டோம்! 

அஞ்சினால் வரலாறு படைக்க முடியாதாம்... ஆம்
அகிலத்திற்கே ஆபத்தை விளைவிக்கும்

அணு உலைகளை அழித்தொழிக்க 
அதிகார மையங்களுக்கு பயந்து ஒதுங்கினால்

அருந்தமிழர்க்கு மட்டுமல்ல அகில உயிர்களுக்கும் 
அச்சமில்லா வாழ்வை உறுதிசெய்யும் வரலாறு நிகழ்ந்திடுமா?

அணு உலையை மூடாமல் 
கூடங்குளத்திலிருந்து கூட்டத்தை 
களையமாட்டோம் என அறைகூவலிடும்
அஞ்சா நெஞ்சர்களுக்கு 
உயிர்க்கருணை உள்ளங்களுக்கு 
தலைவணங்குகிறோம்!

சகப்போராளியாக

கன். மோகன்
91500 40096

தற்காலிகமாக தேச இறையாண்மை என்ற பெயரில் அவர்களை அடக்கி ஒடுக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வருகிறது. அது கனன்று கொண்டு இருக்கும் தீப்பொறியை பரவ செய்யும் என்பதை தவிர வேறு எதுவும் செய்யப் போவதில்லை என்பது என் எண்ணம்...