Pages

23.3.12

இன்குலாப் ஜிந்தாபாத்!

மாபெரும் போராளியின் வளர்ச்சியை முடக்குவதாக எண்ணி, ஒரு பெரிய ஆலமரத்தின் விதையை இந்த இந்திய மண்ணில் ஊன்றிய நாள் இன்று..

ஆம் பகத் சிங் அவர்களின் நினைவு நாள்...

எந்த போராட்ட உணர்வுக்கும் மரியாதை கொடுக்கத் தெரியாதவர்கள் தான் வலது சாரிகள், ஆனால் இங்கு இடது சாரிகள் என்று கூறிக் கொள்பவர்கள் கூட கூடங்குளத்தின் போராட்ட உணர்வுக்கு மரியாதை செலுத்த தவறி விட்டார்கள்.. விளைவு குற்ற உணர்ச்சி...

12 வருஷத்திற்கும் மேலாக உண்ணா விரதம் இருந்து இந்திய நாடு போற்றும் அகிம்சா வழி போராட்டத்தின் வாயிலாக போராடும, மணிப்பூர் ஷர்மிளாவின் போராட்டத்தை குறித்தே கவலைப் படாதவர்கள் கூடங்குள மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க போவதில்லை என்பது கண்கூடு...

போராட்டங்களை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்குவது புதிதில்லை, இடது சாரிகளின் ஆட்சியில் கூட நந்திகிராமம் இரும்புக் கரம் கொண்டு தான் அடக்கப் பட்டுள்ளது. ஆனால் அந்த எழுச்சி, அந்த உணர்வு என்றும் தோயாது.

இந்த வாரம் frontline  இதழில் வெளியான கட்டுரையை படித்து அணு சக்தியின் இன்றைய நிலைமை குறித்து அறிந்து கொள்ளுங்கள்..
http://www.frontlineonnet.com/stories/20120406290610300.htm

அணு சக்தியை ஆதரிக்கும் அனைத்து இடது சாரிகளுக்கும், பகத் சிங் அவர்களின் வார்த்தைகளை இங்கு முன் வைக்கிறேன்...

"அதிகார வர்கத்திடம் ஜாக்கிரதையாக இருங்கள். அது உங்களுக்கு ஒரு நாளும் உதவி செய்யாது. மாறாக அது உங்களை பகடைக் காயை போல் பயன்படுத்தும். நீங்கள் சுதந்திரம் இல்லாமல் இருப்பதற்கும் உங்களது வறுமைக்கும் மூல காரணம் இந்த அதிகார வர்க்கமும் முதலாளி வர்க்கமே. எனவே அவர்களை ஒரு போதும் நம்பாதீர்கள்."

இன்குலாப் ஜிந்தாபாத்!