Pages

20.9.13

கூடங்குளம் - அரசியல் பார்வை... 5

தொலைநோக்கு பார்வை இல்லாத அரசுகளின் காலடியில் இருந்து கொண்டு நம்மால் அணு மின் நிலையங்கள் இல்லாத ஒரு உலகத்தை நினைத்து பார்க்க முடியாது...

இது வரை ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்த கட்சிகளின் அரசியலை பார்த்து விட்டோம்... 

இவர்களுடன் சவாரி செய்து வந்த பல்வேறு சிறுகட்சிகளிடமும் அதே பார்வையை தான் நம்மால் உணர முடிகிறது... 

மொத்தத்தில் இவர்கள் பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்துவதில் வல்லவர்களாய் உள்ளார்கள்....

நாலு பேர் நல்லா இருக்கணும்னா எதுவும் தப்பில்லை என்று உரைக்கும் நாயகனின் வசனத்தை இவர்கள் வெளிப்படையாய் சொல்லாமல் அனைவர் மனதிலும் ஏற்றி விட முடிகிறது....

சரி 

அரசியல்வாதிகளின் கண்களுக்கு ஓட்டு என்பது மட்டும் தான் கண்ணுக்கு தெரியும்... ஆகையால் அவர்களின் அரசியலை புரிந்து கொள்ள முடிகிறது... 

ஆனால் சில மெத்த படித்தவர்கள் கூடங்குளத்தை ஆதரிப்பது எதற்காக?

இந்த கேள்விக்கு விடை கிடைப்பது எளிதல்ல 

அறியாமை என்று கூற முடியாது...
தொலைநோக்கு பார்வை இல்லாதது என்றும் கூற முடியாது...

அது எது என்று ஆதரிக்கும் அவர்களுக்கு தான் தெரியும்...

மிகவும் பாதுகாப்பானது என்று ஏற்றுக் கொள்ளும் இவர்களால் ... ஒரு வேளை விபத்து ஏற்பட்டால் அணு உலை நிறுவனம் பொறுப்பல்ல என்று நமது பிரதமர் கிளம்பினால்.. ஒருவர் விடாமல் அது தவறு என்று பேசுவது தான் ஏனென்று புரியவில்லை?

அதான் விபத்தே ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறுகிறீர்களே பிறகு  ஏன் விபத்து காப்பீடு குறித்து யோசிக்க வேண்டும்...