politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

11.9.10

கொழுகட்டைக்கு என்று ஒரு நாள்...


கொழுகட்டயோ கொழுகொட்டயோ, பிள்ளையார் பெற சொல்லி அவர் போல தொப்பை வளப்பதற்கு இன்னும் ஒரு நாள்... என் பொண்ணுகிட்ட ரம்ஜான் ஏன் கொண்டாடறாங்க என்று கேட்டேன்? 8 வயசு பொண்ணு ஜாலிய இருக்க தான் என்று பதில் சொன்னாள். சரி தான் நமக்கு தப்பாம நம்ம பொன்னும் பிறந்திருக்கிராள்னு நினைச்சிகிட்டேன்.. அடுத்த நாளே விநாயகர் பிறந்த நாள்... இந்த பிள்ளையார் என்ன தப்பு செஞ்சார்னு தெரியலப்பா, போலீஸ் காவல் போட்டு ஒரு மேடையிலே அரெஸ்ட் பண்ணி, மூணு நாள் கழிச்சு ஊர்வலமா கூட்டிகிட்டு போய் அடி அடின்னு அடிச்சு கைய காலை உடைச்சு, தண்ணியில போட்டு மூழ்கடிக்கிரானுங்க பாருங்க... மனசு ஈரமா இருக்கிறவனுக்கு கண்ணுல தண்ணி வந்துடும்... ஆனா இவனுங்களோ கொஞ்சம் கூட கவலை படாம பிள்ளையார் மட்டுமா சாகடிக்கிரானுங்க, குளம் கடல்ல இருக்கிற உயிரினங்களையும் சாகடிக்கிரானுங்க... சாமி மட்டும் எழுந்து வந்து என்னடா கூத்து இதுன்னு கேட்டிடுச்சுன்ன, ஊருக்குள்ள போலீஸ் தேவை இல்ல, ராணுவம் தேவை இல்ல, கோயில் குளம் எதுவுமே தேவை இல்ல... அது வரைக்கும் இவனுங்களும் ஓய போறதில்ல, இதை பத்தி எழுதாம நானும் ஓய போறதில்ல....