politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

19.11.10

தலை (வர்) லாமா...


2010 ஆம் ஆண்டு மிகவும் வன்முறை மிகுந்து இருந்தது எனவும், வரும் ஆண்டு 2011 பேச்சு வார்த்தை மிக்க ஆண்டாக அமைய வேண்டும் என்று அவருடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்...
இத்தனை நாளை திபெத்தில் இல்லாமல் வெளி உலகில் சுற்றி வரும் போதே வெளி உலகம் பற்றி தெரியவில்லை என்றால் இவர் திபெத்திற்கு சென்றால் இன்னும் எதுவுமே தெரியாத வெகுளியாகவே இருப்பார் என்று தெரிகிறது...
நக்சலிசம் மாவோயிசம் ஆகிய பழமையான கோட்பாடுகளை தூக்கி தூர எரிய வேண்டும் என்று முதலாளித்துவத்திற்கு ஓ போடுகிறார்...
அப்படி பார்த்தால் மேலே சொன்ன இரண்டு தத்துவங்களை விடவும் அரத பழசான மத கோட்ப்படுகளை தான் முதலில் தூக்கி எரிய வேண்டும்...
அது இருக்கட்டும் இந்த உலகில் உள்ள மக்கள் உன்ன உணவில்லாமல், தங்க இடமில்லாமல் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தால் அது வன்முறை என்றால், முதலில் மனு கொடுக்கும் போதே அதை கிழித்து போட்டு விட்டு இவர்களின் பிரச்சினைகளை எதையும் தீர்க்காமல் விட்டதை வன்முறை என்று கூற முடியாதா...
ஆக பணம் இருப்பவர்களுக்கு மட்டும் ஜால்ரா அடிக்கும் பழக்கத்தை திபெத்தின் மன்னர் என்ற முறையில் முடி போனாலும் மறக்க வில்லை போலும்....