politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

21.11.10

அறிவு தனி நபர் சொத்தா...?


உலகத்தில் பணம் செய்ய பல வழிகள் உள்ளது... அவற்றில் மிகவும் சுலபமான வழிகளை முதலாளித்துவம் எடுத்துக் கொண்டு சுரண்டி கொழுக்கிறது...
http://www.pcworld.in/news/microsoft-indians-against-piracy-will-pay-genuine-software-41212010 மேலே குறிக்கப்பட்டுள்ள லின்கானது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய விற்பனை உத்தி குறித்தானது..
உபுண்டு லினக்ஸ் சின் வளர்ச்சி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வளர்ச்சியை பாதிப்பதால், அந்த நிறுவனம் சுலப தவணை திட்டத்தில் தனது மென்பொருளை விற்பனைக்கு கொண்டு வருகிறது...
அதற்க்கு முன்னோடியாக மக்களின் மனதில் வாங்கும் எண்ணம் வர வைப்பதற்கு சர்வே எடுக்கிறேன் என்ற பெயரில் தனக்கு தேவையான என்னத்தை வெளியிட்டு மக்களின் மனதை குழப்பிக் கொண்டிருக்கிறது...
உபுண்டு லினக்ஸ் மிக பெரிய அளவில் முன்னேறாததற்கு காரணமே, அதை பற்றிய சரியான புரிதல் மக்களிடம் இல்லாதது தான்... இதை தெளிவாக்க வேண்டிய அரசாங்கமோ வாங்கிய காசுக்காக கை கட்டி வாய் பொத்தி நிற்கிறது...
திரு பில் கேட்ஸ் அவர்கள், இந்திய மக்களுக்காக பணம் வாரி வழங்கிய போது எனக்கு ஏற்பட்ட சந்தேகம் மேற்கூறிய செய்தியால் ஊர்ஜிதமாகிறது..
ஒரு முதலாளி பணத்தை வாரி இறைக்கிறான் என்றால் அது அவன் கண்ணோட்டத்தில் மூலதனமே...
அத்தகைய மூலதனம் குறைந்த பட்சம் 20% சதவிகித லாபத்தை தந்தால் மட்டுமே அவன் மனம் ஆறுதல் அடையும்...
இல்லையேல் அவனுக்கு தூக்கம் வருவதில்லை...
ஆக பில் கேட்ஸ் விதைத்தது மொத்தம் மூலதனமே... தான தர்மம் அல்ல என்பது தெள்ள தெளிவாக புலனாகிறது...