politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

5.1.12

போராட்டங்களை கொச்சைப் படுத்தும் போராட்டம்

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் என்பது ஏனைய மக்களின் போராட்டங்களை கொச்சைப் படுத்தும் வகையில் அமைந்துள்ளது...

ஒரு மருத்துவர் கொலை செய்யப் பட்டது வருத்தம் தரும் விஷயமாக இருந்தாலும், நாட்டில் நடக்கும் ஒவ்வொரு கொலைக்கும் வேலை நிறுத்தம் எந்த வகையிலும் தீர்வு ஆகாது...

இலவசமாக அரசு மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க முடியும் பொழுது ஒவ்வொரு அரசு மருத்துவரும் தனியாக மாலை நேரங்களிலும், பலர் அரசு வேலை நேரங்களிலும் தனியாராக இயங்கி மக்களிடம் இருந்து பணம் சுருட்டுவது இயல்பாகவே உள்ளது...

அரசு மருத்துவர்கள் வெளியில் தனியாராக வேலை செய்யக் கூடாது என்று சட்டம் இருந்தும், அரசும் அரசு மருத்துவர்களும் ஒருவொருக்கொருவர் காப்பாற்றும் முயற்ச்சியில் இந்த சட்டத்தின் கண்கள் கருப்பு துணியால் கட்டப் பட்டு குருடாக்கப் படுகிறது...

ஒவ்வொரு ஊழியரும் வேலை நிறுத்தம் என்பதை கடைசி ஆயுதமாகவே பயன்படுத்துகின்றனர்...

ஒவ்வொரு வேலை நிறுத்த நாளும் ஒரு நாள் சம்பளத்தை தியாகம் செய்வதால், வேலை நிறுத்தம் என்பதற்கு ஒரு மரியாதை இருந்தது...

இந்தியாவிலேயே மிகவும் குறைந்த சம்பளம் வாங்கும் தமிழக அரசு மருத்துவர்கள், ஒரு நாள் சம்பளம் போனால் போகட்டும் மாலையில் எங்கள் கிளினிக் தரும் வருமானத்திற்கு ஈடாகுமா என்ற எண்ணம் தான் இந்த போராட்டத்தின் மூலம் தெரிய வருகிறது...

தாங்கள் சார்ந்த சங்கத்தின் கோபத்தினை ஏற்றுக் கொள்ள விரும்பாத சில மருத்துவர்கள் வேண்டா வெறுப்பாக கலந்து கொண்டதை எண்ணிப் பார்த்தாலும், இதை கூட எதிர்க்க முடியாமல் நீங்கள் என்ன சம்பாதித்துக் கிழித்து விடப் போகிறீர்கள் என்று தான் கோபம் வருகிறது...

மருத்துவர்கள் தங்கள் கடமையை சரியாக செய்தாலே போதும், எந்த அசம்பாவிதமும் நடக்காது..

மருத்துவர்களின் அலட்சிய போக்கு நோயாளியின் உயிரை எடுத்துக் கொண்டிருந்த காலம் போய், அதுவே ஒரு மருத்துவரின் உயிரையும் பறித்திருக்கிறது என்பதை உணர்ந்து இனியாவது மருத்துவர்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்களா?