
இந்த உலகம் ஆனது இரண்டு பக்கங்களை உடையது... உலகம் என்று நான் கூறுவது மனிதர்களை..
இந்த மனிதர்கள் இரு வகை படுகிறார்கள்...
ஒன்று மற்றவர்களை சுரண்டி கொழுப்பது...
அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து போராடுவது...
சுரண்டி கொழுப்பது நல்லது என்று பெருவாரியான மக்களின் மனதில் தவறாகவே படுவதில்லை...
எப்படி லஞ்சம் கொடுப்பது என்பது ஒரு தவறான விஷயமாக பல பேருக்கு தெரிவதில்லையோ அது போலவே நாம் எப்படி மற்றவர்களை சுரண்டி கொழுக்கிறோம் என்பதும் தெரிவதில்லை....
போராடும் மனிதர்களும் ஒரு கட்டத்தில் இந்த சுரண்டி கொழுக்கும் கூட்டத்தின் பண்புகளை எடுத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக ஒன்றி விடுகிறார்கள்...
சுரண்டும் கூட்டத்தின் ஒலிபெருக்கியாகவே பெரும்பாலான ஊடகம் உள்ளது என்பது தான் வியப்புக்குரிய உண்மை...
இதில் வேடிக்கை என்ன என்றால் இப்படி சுரண்டி கொழுக்கும் ஊடகங்களின் நடுவே நடக்கும் பனிப்போர் தான்.. சில சமயம் தங்களையும் அறியாமல் உண்மைகளை வெளி விட வேண்டி இருக்கிறது...
இப்படி தான் NDTV யில் வெளியான பர்க்கா தத் அவர்களின் தன்னிலை விளக்கம் குறித்த ஒரு நிகழ்ச்சி அமைந்து விட்டது...
இதை பற்றி விளக்கி கூறும் அளவுக்கு அதில் ரகசியம் இல்லை... மேலும் விவரங்களுக்கு கீழ் காணும் லிங்கை சொடுக்கவும்...
http://www.youtube.com/watch?v=8mH0uae4DFo
http://www.youtube.com/watch?v=EbXQeF85sIc&feature=related
http://www.youtube.com/watch?v=Sp-zIMLROFQ&feature=related
http://www.youtube.com/watch?v=AWqc_3sLzGE&feature=related