politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

24.1.11

தமாசு தமாசு...

மருத்துவர் திரு ராமதாஸ் அவர்கள் சில நேரங்களில் சுப்ரமணிய சாமி தமிழகத்தில் இல்லாத குறையை தீர்த்து கொண்டு வருகிறார்...
திடீரென்று தைலாபுரத் தோட்டத்தில் போதி மரம் எதோ நட்டுவிட்டு அதனடியில் அமர்ந்து விட்டார் போலும்..
திரைத்துறையினர் தான் தமிழகத்தை பல ஆண்டுகளாய் ஆட்சி செய்து வருகிறார்கள் என்பது ஏனோ நமது அய்யாவுக்கு அம்நீசியாவில் மறந்து விட்டது போலும்,
அவர்கள் ஆட்சியில் அமர்வதின் மூலம் இவரும் ஆதாயம் அடைந்ததை வகையாக மறைப்பதற்கு எங்கு தான் கற்றுக் கொண்டாரோ தெரியவில்லை..

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=5869:2011-01-24-05-10-11&catid=56:india&Itemid=86

11.1.11

தமிழகம்?


வண்ண தொலைக்காட்சி பெட்டிகளும், ipl ஏலமும் தமிழக மக்களின் மற்ற எல்லா கவலைகளையும் மறக்க அடிக்கும் மருந்தை மாறியுள்ளது...
போதாக் குறைக்கு தே. மு. தி. கவினரின் கவலையும் பலரின் முக்கிய பிரச்சினையை கண்டுக் கொள்ளாமல் விட செய்திருக்கிறது...
திரு. விஜய காந்த் அவர்களின் துணிச்சல் எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது, 2000 ரூபாய் அதிகம் கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் வாக்குரிமையை அடகு வைக்கும் தமிழக மக்களை நம்பி எப்படி தான் இவர் தனியாக நிற்கிறாரோ என்று தெரியவில்லை...
108 அவசர சிகிச்சை ஊர்தி என்பது உண்மையாகவே நல்ல ஒரு திட்டம் ஆனால் அதை தவிடு பொடியாக்கும் முயற்சியில் ஒவ்வொரு அரசு மறுத்தவரும் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கும் போது எங்களால் 2000 ரூபாய் கொடுத்து தான் வோட்டு வாங்க முடிகிறது என்றால் அது மிகை அல்ல...
மொத்தத்தில் விளையாட்டு வீரர்கள் அடிக்கும் நகைச்சுவையும், அரசியல்வாதிகள் அடிக்கும் நகைச்சுவையும் என் கோபத்தையும் மீறி சிரிப்பை வர வைத்து எனக்கு high bp வராமல் பார்த்து கொள்கிறார்கள்...
வாழ்க இம்மக்கள் வாழ்க இந்நாடு...

4.1.11

எதிர்ப்பு


நித்யானந்தரின் திருவண்ணாமலை வருகையை ஒற்றி அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் நடந்தேறியது...
ஆன்மீக போர்வையில் நடந்து வரும் சுரண்டல்களை கேள்வி கேட்க வேண்டிய வாலிபர்கள் வயோதிகர்களின் முதுகை தாண்டி வர முடியாத சூழ்நிலையில் உள்ளது சிறிது வருத்தத்தை அளிக்கிறது...
தொலைக்காட்சியில் பல முறை ஒளி பரப்பப்பட்டதில் தோழர்[?] கருணா அவர்கள் பேசியது, பொது உடமை இயக்கம் என்பது தமிழகத்தில் இன்னும் உயிருடன் உள்ளது என்னும் என் எண்ணத்தில் ஒரு சறுக்கலை ஏற்படுத்தியது...
நீங்கள் நித்யானந்தரை வெறுத்து ஒதுக்குங்கள், என் அவனை போன்ற சாமியார்களின் பின்னால் செல்ல கூடாது என்று பறை சாற்றுங்கள், ஆன்மீகத்தின் ஆணிவேரை அசைத்து பாருங்கள்,
ஆனால்
அதை எல்லாம் விட்டு விட்டு திருவண்ணாமலை கோவிலின் புனித தன்மை கேட்டு விட்டதாக புருடா விடுவதெல்லாம் நம்பும்படியாக இல்லை என்பதே உண்மை.
நீங்கள் பெருமையுடன் கூறிக் கொள்ளும் அண்ணாமலையார் திருக்கோயில் உண்மையில் இடைக் காட்டு சித்தரின் சமாதி என்பது பல ஆன்மீகவாதிகளே ஒத்துக் கொள்ளும் விஷயமாக உள்ள பொழுது இன்னும் கோயிலையும் கடவுளையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன?
மனிதன் கண்டு பிடித்த மிக சிறந்த விஷயம் என்ன என்றால் அது கடவுள்...
இதை கண்டு பிடித்து கடவுள் இல்லை என்று சொன்ன பகத் சிங்கின் படத்தை முன் வைத்து கொண்டு கடவுள் புனிதம் என்று தயவு செய்து நீங்களும் கிளம்பி விடாதீர்கள்...
அப்படி கிளம்பி கடவுளை நம்பி இருப்பவர்களின் வாழ்க்கையில் மண் அள்ளி போட்டு விடாதீர்கள்... ஆன்மீக தொழிலில் நீங்களும் கலந்து கொள்ளாதீர்கள்...