politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

17.7.10

ஒரே நகைச்சுவை தான் போங்கள்...


முத்தமிழ் வித்தகர், சொல் வேந்தர், ஒவ்வொரு முறையும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் போதெல்லாம் அமைதி காத்த கணவான் திரு மன்மோகன் அவர்கள், பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து விட்டார், நாள் தோறும் இவர் எழுதிய எந்த கடித்தத்துக்கு பதில் அனுப்பி உள்ளார் என்பது தான் தங்க மலை ரகசியமாக உள்ளது... இலங்கையில் நடக்கும் இனப் பிரச்சினைக்கு இணக்கமான பதிலை, ஆலோசனையை தாங்கள் தான் தந்து என்னை காப்பாற்ற வேண்டும் என்று தனது அறிவாற்றலை வெளிப்படுத்தி உள்ளார்.
அய்யா உங்கள் இருவர் கடிதப் போரையும் நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வந்து தான் தமிழர்களை காப்பாற்ற போகிறீர்கள் என்று எந்த மடையனும் உங்களை நம்பி இருக்கவில்லை.
நீங்கள் இலங்கைக்கு எல்லாம் சென்று எதுவும் புடுங்க வேண்டாம். தமிழ் நாட்டில் தமிழக மக்களை காப்பாற்ற ஏதாவது செய்யுங்கள். அது போதும். ஆனால் ஒன்று எங்களின் இறுக்கமான சூழ்நிலையை, தங்களது நகைச்சுவை கடிதங்களால் கொஞ்சம் வாழ்க்கையை மகிழ்ச்சி கரமாக ஆக்கி கொண்டிருக்கீர்கள் என்பது மட்டும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது...