politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

31.12.11

2011 லிருந்து 2012...

கடைசி இரு வாரங்கள்...
நாடகத்தின் உச்ச கட்டம் அரங்கேறிய நாட்கள்...

கூடங்குளம் குறித்து பிரதமர் உறுதி.

கூடங்குளம் கண்டிப்பாக திறக்கப் படும் என்றும், ஏதாவது ஆபத்து என்றால் ரஷ்ய நிறுவனம் பொறுப்பேற்காது என்றும் பிரதமர் கூறியதும்..

முல்லைப் பெரியாறு விவகாரம்.

இரு மாநில மக்களின் ஒற்றுமையை குலைத்த சங்கதி, காங்கிரஸ் நிர்வாகிகளிடமே ஒற்றுமையை குலைத்த விவகாரம், பல்வேறு பிரச்சினைகளை மக்களின் மனதில் இருந்து நீக்கிய சமாச்சாரம்

லோக் பால் மசோதா.

ஊழலை ஒழிக்க சட்டம் கொண்டு வருவது என்பது, திருடனை கூப்பிட்டு காவலுக்கு உட்கார வைப்பது போன்றது என்று உணர்த்திய நிகழ்ச்சி... தனக்கு தேவையான சரத்து லோக் பால் மசோதாவில் உள்ளது என்று தெரிந்ததும், உண்ணாவிரதத்தை கைவிட்ட அண்ணா ஹஜாரே.. காங்கிரஸ் அரசின் கையாலாகா தனத்தை தோலுரித்து காட்டிய நள்ளிரவு நாடகங்கள்.

மன்னார்குடி குடும்பத்தினர் நீக்கம்.

நகமும் சதையுமாக இருந்த உடன்பிறவா சகோதரிகளின் பிரிவு, ஏன் என்று எழுந்து நிற்கும் கேள்வியுடன் மொத்த பிரச்சினைகளும் மறந்த நிலை.

எதிர்பார்ப்புடன் தொடங்கிய ஆண்டு, அலைக்கற்றை ஊழல் புயலில் சிக்கி, தமிழகத்தில் தானே புயலில் முடிந்திருக்கிறது...

அடுத்த ஆண்டிலும் எந்த வித மாறுதலும் இருக்க போவதில்லை என்று அறிவு சொன்னாலும், நம்பிக்கை தானே வாழ்க்கை என்று புத்தி சொல்கிறது...

ஆகவே ஆங்கில புத்தாண்டை இனிதே வரவேற்று முடிந்த வரை தோய்வில்லாமல் மீண்டும் எழுத முயற்ச்சிக்கிறேன் என்று உறுதி சொல்கிறேன்...

14.12.11

இடுக்கியும் இடிந்தகரையும்

கூடங்குளம் போராட்டமும், முல்லைப் பெரியார் அணை போராட்டமும் ஏறக்குறைய ஒரே அடிநாதம் கொண்டது தான்...இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை, பூகம்பம் வந்தால் என்னாகும் என்ற பயம் தான்...


இடிந்தகரையும் சரி, இடுக்கியும் சரி  பூகம்ப சோன் மூன்றில் தான் வருகின்றன...

இரண்டு இடத்திலுமே பூகம்பம் ஆறு ரிக்டர் அளவுக்கு மேல் வந்தால், மனித உயிர் இழப்பு என்பது அபிரிமிதமாக இருக்கும்...

[இடுக்கியில் பாதிப்பு வராது என்று கூறுபவர்களுக்கு - ஆறு ரிக்டருக்கு மேல் பூகம்பம் வந்தால், முல்லை பெரியாறு அணை மட்டும் அல்ல... இடுக்கி அணையும் உடைய வாய்ப்புள்ளது என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். விவசாய சங்க தலைவர் ஒருவர் கேட்டதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன், கேரளா அரசு கட்டப் போகும் அணை மட்டும் பூகம்பம் வந்தால் இடியாதா?]

அப்துல் கலாம் அவர்கள் கூடங்குளம் பகுதியில் பூகம்பம் வரவே வராது என்று ஆரூடம் சொன்னார். மேலும் ராஜ ராஜன் கட்டிய அணையே இன்னும் வலுவாக இருக்கிறதே என்று மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டார்...

விஷயம் என்ன என்றால்,

நேற்று அப்துல் கலாம் அவர்கள், முல்லைப் பெரியாறு அணையை பலப் படுத்த ஆலோசனை கூறி உள்ளார்... இது சரியான ஆலோசனையாக இருந்தாலும், கூடங்குளத்திற்கு ஒரு பார்வை என்றும்... முல்லைப் பெரியாறுக்கு ஒரு பார்வை என்றும் இருப்பது நியாயமா?

இடிந்த கரையில் பூகம்பம் ஆறு ரிக்டருக்கு மேல் வராது என்றால் இடுக்கியிலும் ஆறு ரிக்டருக்கு மேல் வரப் போவதில்லை..

எப்பொழுதோ கட்டிய கல்லணை பலமாக இருக்கிறது என்றால், அதற்க்கு பிறகு கட்டிய முல்லை பெரியாறு அணை கூட பலமாக தானே இருக்கும்...

இவ்வளவு பேசிய அப்துல் கலாம் அவர்கள் நதிநீரை இணைப்பது குறித்தும், ஆறுகளை தேசிய மயமாக்குவது குறித்தும் பேசி இருக்கலாம்.. [இன்று மாலை வெளியான செய்திக் குறிப்பில் இந்த ஆலோசனையையும் குறிப்பிட்டுள்ளார், அப்துல் கலாம் அவர்கள்]

இடுக்கியில் பாதிப்பு வந்தால் இப்பொழுது வாழ்பவர்களுடன் உயிரிழப்பு முடிந்து விடும்.. கூடங்குள பகுதியிலோ தப்பி பிழைத்தவர்களும் இனி பிறக்கப் போகிறவர்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதை மீண்டும் நினைவுப் படுத்துகிறேன்.

மக்களின் பயத்தை போக்க அப்துல் கலாம் கூறிய ஆலோசனை பரிசீலிக்கப் பட வேண்டியது தான்.. அதே நேரத்தில் கூடங்குள மக்கள் போராட்டத்தையும் கலாமை ஆதரிப்பவர்கள் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்று கூறிக் கொள்கிறேன்.

உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவால் சிறிது நாட்கள் நாம் மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தலாம் என்பது தான்  நிதர்சனம்...

http://tamil.oneindia.in/news/2011/12/13/tamilnadu-army-can-maintian-protect-dams-kalam-writes-pm-aid0128.html

http://www.mapsofindia.com/maps/india/seismiczone.htm

12.12.11

அடுத்து கல்பாக்கம்

கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து விசாரிக்க காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் சென்றதாகவும், கதிர்வீச்சு குறித்த கேள்விக்கு அணு ஆற்றல் கட்டுப்பாட்டு குழு நிர்ணயித்த அளவை விட அதிகமாக கதிர்வீச்சு வெளியாகவில்லை என்று அதிகாரிகள் அவரிடம் கூறி உள்ளனர் ...
இதற்க்கு நேரடியாக ஆமாம் கதிர்வீச்சு வெளியாகிறது என்று உண்மையை ஒத்துக் கொண்டிருக்கலாம்..
http://ibnlive.in.com/generalnewsfeed/news/mp-visits-kalpakkam-nuclear-plant/924258.html

இன்று,
வலை பதிவுகளில் சூறாவளி என்ற பெயரில் இயங்கும் அமைப்பு, கூடங்குளம் போராட்ட குழுவின் தலைவரான திரு.உதய குமார் அவர்களின் பேட்டியை வெளியிட்டு உள்ளனர். அந்த பேட்டியில் கல்பாக்கம் மீனவர்கள், கல்பாக்கம் பகுதியில் மீன்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாகவும், வழக்கமாக கிடைக்கும் மீனும் நோய் வாய்ப் பட்டே இருப்பதாகவும் கூறுவதாக தகவல் அளித்துள்ளார்

அந்த பேட்டியின் ஒலி வடிவத்தை, எழுத்து வடிவில் மாற்றி நம் பார்வைக்கு வைத்து உள்ளனர்..

http://suraavali.blogspot.com/2011/12/blog-post_11.html

எனக்கு ஒலி வடிவத்தை பதிவுகளில் இணைக்கும் தொழில் நுட்பம் தெரியாததால், அந்த ஒலியை, ஒலி ஒளி வடிவாக மாற்றி யூட்யூப் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளேன்...



நேற்று என் முந்தய பதிவில்,  சூனிய விகடன்என்பவர்  நம் நண்பர் கூடல் பாலா குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். நான் கடைசியாக கூடல் பாலாவிடம் பேசிய பொழுது, உண்ணாவிரதம் இருந்த காரணத்தால் அவர் உடல் நிலை மோசமாகி போனதாகவும், மருத்துவர்கள் பேசுவதை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறி இருந்தார். ஆகையால் அவரிடம் நான் பேச முயற்ச்சிக்கவில்லை. ஒரு வாரம் முன்பு வைரை  சதீஷ் இடம் கேட்ட பொழுது, அவரும் தகவல் கிடைத்தால் தெரிவிக்கிறேன் என்று கூறினார்... மக்களுக்காக போராடிய மாவீரன் நம் தோழன் கூடல் பாலா. வலை பதிவுகளின் வரலாற்றில் அவன் பெயர் நீங்கா இடம் பிடித்திருக்கும்.

11.12.11

சத்திய_சோதனை @ இந்தியா.காம்

சத்திய சோதனை என்ற தலைப்பில்  இந்த வருட ஏப்ரல் மாத இறுதியில் இணையத்தில் உலவும் கருத்துக்களை முடக்குவதற்கு The Information Act 2008 மாற்றம் கொண்டு வந்ததை குறித்து கொஞ்சம் தவறாகவே குறிப்பிட்டு இருந்தேன்...

இன்று கபில் சிபல் பேசிய பிறகு, இணைய உலகமே விழித்து கொண்டு உள்ளது... சுமார் எட்டு மாதங்கள் கழிந்த பிறகு தான் அந்த துறையின் அமைச்சருக்கே இணைய உலகில் உலவும் கருத்துக்களை முடக்குவதில் உள்ள சிரமம் எரிச்சலை கிளப்பி உள்ளது..

தோழர். புலவர். சா. ராமானுசம் பதிவர்களுக்கு சங்கம் அமைக்க முன்முயற்சி எடுப்போம் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

சில தோழர்கள் இந்த சட்டம் பதிவர்களுக்கு பொருந்தாது என்ற நினைப்பில் உள்ளதும் அந்த பதிவில் வந்த பின்னூட்டத்தில் தெரிய வந்துள்ளது. இந்த சட்டத்தில் மார்ச் மாத நடுப் பகுதியில் பதிவர்கள் குறித்து சரத்துக்கள் சேர்க்கப் பட்டு அவர்களின் பேச்சுரிமையை அடக்கவும் வழி வகை செய்யப் பட்டுள்ளது...

பதிவர்கள் எப்படி இந்த சட்டத்தில் நுழைக்கப் பட்டுள்ளனர் என்பதற்கான செய்திக் குறிப்பு...
http://chmag.in/article/may2011/cybercrimeopedia-new-rules-under-information-technology-act

http://www.drishtikone.com/blog/draconian-intent-government-india-new-it-act-rules-which-threaten-gag-bloggers

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதத்தில் 358 பதிவுகளை நீக்க வேண்டும் என்று இந்திய அரசு, பன்னாட்டு இணைய நிறுவனங்களிடம் வைத்த கோரிக்கையின் பட்டியல் இந்து நாளிதழின் செய்திக் குறிப்பில் உள்ளது

http://www.thehindu.com/opinion/editorial/article2698888.ece

இதன் மூலம் பாதிக்கப் பட்டவர் தான் நம் பதிவர் தோழர். ரெவெரி அவர்களும், அது குறித்த அவரின் பதிவு http://reverienreality.blogspot.com/2011/11/spam.html

9.12.11

தண்ணீர் - வெள்ளம்

முல்லை பெரியாறு அணை...

தமிழகத்திற்கு நீர் வரத்து இல்லை என்றால் தமிழக விவசாயிகள் பாதிக்கப் படுவார்கள்..

அணை உடைந்தால் கேரளா மக்கள் பாதிக்கப் படுவார்கள்.

கேரளா அரசு அணை கட்டி தருகிறேன் என்று சொல்வதை காது கொடுத்து கேட்டால் தமிழகத்திற்கு நீரே கிடைக்காது..

அதே சமயம் தமிழக அரசும் இந்த அணையின் உறுதியின் மீது நம்பிக்கை வைத்து இது உடையவே உடையாது என்று அடித்து சொல்வது ஏற்புடையதும் அல்ல...

தமிழக அரசே தமிழகத்திற்கு நீர் கிடைக்கும் வகையில் புதிய அணை கட்ட வேண்டும்.. ஆனால் அது மாதிரி முனகல் கூட எழவில்லை என்பது வருத்தத்துக்கு உரியது..

நதி நீரை தேசிய மயமாக்குவது மட்டுமே பிரச்சினைக்கு முடிவு என்று கூறுவது மத்திய அரசின் ஓட்டு அரசியலுக்கு சாதகமாகவே முடியும்.

பிரவோம் என்ற எர்ணாகுளத்தில் உள்ள தொகுதிக்கு இடைத் தேர்தல் வர இருப்பதாலும், இரு கட்சிகளின் தலைவர்கள் மீதும் ஊழல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாலும் மக்கள் கவனத்தை திசை திருப்ப கேரள அரசியல்வாதிகள் முயற்சி செய்கின்றனர்.

பல்வேறு கட்ட விலைவாசி உயர்வும், தமிழகத்தில் நிலவும் அசாதரணமான மக்கள் விரோத ஆட்சி குறித்த பதிவுகள் மக்கள் மனதில் இல்லாமல் இருக்க தமிழக அரசியல்வாதிகள் இந்த பிரச்சினையை கையாளத் தெரியாமல் கையாள்கின்றனர்.

இந்த சூழ்நிலையை பயன் படுத்தி சந்தர்ப்ப வாதிகள் தங்களுக்கு தேவையானதை செய்து கொள்ள முடியும்..
தமிழக பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடலாம், தமிழர்களின் பொருட்களை சூறையாடலாம், மலையாள கடையை அடித்து நொறுக்கி கொள்ளை அடிக்கலாம், அல்லது மலையாள பெண்கள் மீதும் வன்முறையில் ஈடுபடலாம்..

தமிழனை அடித்து விட்டான் மலையாளி என்றும், மலையாளியை அடித்து விட்டான் தமிழன் என்றும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு ஆளும் வர்க்கத்தின் இனவெறி அரசியலுக்கு பலி ஆகாமல் சற்று நிதானமாக யோசித்து நாம் அனைவரும் ஒற்றுமையாய்  நலமாக வாழ சரியான வழியை நிபுணர்கள் முன்வைத்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்...

ஒன்றை மற்றும் நினைவில் கொள்ள வேண்டும்... பணக்காரர்களுக்கு இரு மாநில காவல் துறையும் பாதுகாப்பு கொடுக்கும்.. இந்த பிரச்சினையில் பாதிக்கப் படப் போவது பெரும் பணக்காரர்கள் அல்ல, கஷ்டப் படும் உழைக்கும் வர்க்கமே.

http://www.asianage.com/india/opposition-will-raise-funds-build-new-dam-achuthanandan-272

இது சம்பந்தமாக கேரளா மக்கள் தயாரித்த வீடியோ வும், அதற்க்கு பதில் கொடுத்து தமிழக முன்னாள் பொறியாளர்கள் தயாரித்த வீடியோ வும் இந்த பக்கத்தின் கடைசியில் உள்ளது

8.12.11

அந்நிய மூலதனம் - நிலைமையை சீராக்குமா?

அந்நிய மூலதனம் சில்லறை வர்த்தகத்தில் நுழையும் பொழுது விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றும், மக்களுக்கு விலை குறைவாகவும் தரமாகவும் பொருட்கள் கிடைக்கும் என்றும் கூறப் படுகிறது...

அந்நிய மூலதனம் உள்ளே வருவதால் யார் யாருக்கு என்ன என்ன பிரச்சினை வரலாம் என்று பார்ப்போம்..

முதலில் ஒரு பொருளை விற்பனை செய்ய தேவைப் படும் விற்பனை பிரதிநிதி வேலை இழப்பான்.. ஒரு பொருளை மொத்தமாக ஒரே இடத்தில் வாங்கும் பொழுது, அந்த பொருளை விளம்பரப் படுத்தவோ அல்லது ஆர்டர் எடுக்கவோ தேவை இல்லை என்பதால் பல விற்பனை பிரதிநிதிகள் வேலை காலி..

இரண்டாவது பல சிறிய சில்லறை வியாபாரிகள் கடையை மூட வேண்டியது தான்.. அவர்களிடம் சர்வீஸ் சரியில்லை என்று கூறுவீர்களேயானால், நீங்கள் தொடர்ந்து அதே வியாபாரியிடம் வாங்கும் பட்சத்தில் அவர் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைக்க தவறுவதில்லை... என்னை பொறுத்தவரை இதை பெரிய கடைகளில் எதிர் பார்க்க முடியாது... நிச்சயம் சில்லறை வணிகர்கள் அழிந்து விட மாட்டார்கள், அவர்களின் எண்ணிக்கை குறைந்து விடும். நேர்மையான கடைகளும், மக்களிடம் நம்பிக்கை பெற்ற நட்பான கடைகளும் அழியாது..

மூன்றாவது பாதிக்கு மேல் கொள்முதலை வெளிநாடுகளில் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளதால் உலகம் முழுவதிலும் கால் பதித்து வைத்திருக்கும் அந்நிய நிறுவனங்கள் பெரும்பாலும் விலை குறைவாக உள்ள பகுதிகளில் கொள்முதலை ஆரம்பிப்பார்கள்.. அப்பொழுது உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப் படுவார்கள்... நம் நாட்டில் நூல் விலை உயரும் பொழுது வெளிநாட்டில் இப்பொழுது இருக்கும்  முதலாளிகள் இறக்குமதி செய்யவில்லையா என்ற கேள்வி வருகிறது... அந்த நேரத்தில் வெளிநாட்டில் இருந்து நூல் இறக்குமதி செய்வதை தடை செய்ய கோரி போராட்டம் நடந்து நிலைமை சீரானது. ஆனால் அந்நிய முதலாளிகளுக்கு கதவை திறந்து விட்ட பிறகு தடை போட முடியாது என்பதே நிதர்சனம்..

நான்காவது பெரும்பாலான இந்திய பணம், அந்நிய நிறுவன நாடுகளின் பணமாக மாறி விடும் பட்சத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைய ஆரம்பிக்கும். இது சில அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கு வித்திடும் என்பது கண்கூடு...
உதாரணம் தற்பொழுது இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதால் பெட்ரோல்  விலை உயர்வது கண்ணால் கண்டு விட்டோம்.

செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, விலை ஏற்றம் செய்ய எதுவாக மொத்த கொள்முதல் நடக்கும். அப்பொழுது வெளி மார்கெட்டில் கிடைக்கும் விலையை விட இந்த அந்நிய நிறுவனங்களின் பொருள் குறைந்த விலையில் விற்றாலும் அதிக லாபம் பெற ஏதுவாகும்...

இன்னும் முன் பெற வர்த்தகம் மூலமாகவும் விலையை நிர்ணயிப்பதில் வாய்ப்புள்ளதாக என் கணிப்பு. ஏற்கனவே நம் நாட்டு முன்பேர வர்த்தகத்தில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருவது நாம் அறிந்ததே.. தற்பொழுது திடீரென்று சர்க்கரை உற்பத்தி நம் நாட்டில் உபரி உற்பத்தி ஆனதால், அதை ஏற்றுமதி செய்வது என்று இந்திய அரசு முடிவெடுத்ததால் சர்வதேச முன்பேர வர்த்தகத்தில் சர்க்கரை விலை குறைந்தது என்றும் இதனால் வெளிநாட்டு வர்த்தகர்கள் நஷ்டத்தை சந்தித்தார்கள் என்றும் செய்திக் குறிப்பு சொல்கிறது...

கீழே உள்ள படத்தை சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்..



ஆக இனி அப்படி ஏதாவது அதிக உற்பத்தி நடக்கும் பட்சத்தில் அந்நிய நிறுவனங்கள் உள்நாட்டில் அதை வாங்கி முடக்கி வைத்து முன்பேர வர்த்தகத்தில் விலை குறையாமல் பார்த்துக் கொள்வார்கள்..

சர்க்கரை குறித்து நமக்கு என்ன கவலை, நம் நாட்டிலே தான் ரேஷன் கடைகள் அருமையாக இருக்கிறதே என்பவரா நீங்கள்..
உங்களுக்காகவே அரசு உணவு பாதுகாப்பு மசோதா என்று ஒன்றை உருவாக்கி ரேஷன் கடைகளை அழிக்க கிளம்ப போகிறது...

தற்பொழுது உள்ள சில்லறை வணிகம் அழுகிய நிலையில் தான் உள்ளது, ஆனால் அதை சீராக்க முயற்சி செய்யாமல்... எவனோ ஒரு வெளிநாட்டுக் காரன் வந்து சரி செய்வான் என்று நம்புவது எந்த விதத்தில் சேர்ப்பது என்று தான் தெரியவில்லை

7.12.11

கமாடிடி சந்தை...

நேரடி வர்த்தகம் [spot trade] மற்றும் முன்பேர வர்த்தகம்.. [futures]

நாம் அன்றாடம் வாங்கும் பொருட்களில் எப்படி எல்லாம் விலை நிர்ணயம் செய்கிறார்கள் என்று ஒரு பார்வை. கட்டுரையாக கொடுத்தால் படிக்க சிரமமாக இருக்கும் என்று கேள்வி பதில் மூலம் இங்கு விளக்குகிறேன்...

ஆணிவேர்: நேரடி வர்த்தகம் என்றால் என்ன?

நண்பர்: இணையத்தில் இன்று விற்கும் பொருளை இன்று என்ன விலை என்று பார்த்து இணையத்தில் ஆர்டர் செய்து வீட்டுக்கே டெலிவரி செய்யும் முறை தான் நேரடி வர்த்தகம்.

ஆணிவேர்: முன்பேர வர்த்தகம் என்றால் என்ன?

நண்பர்: ஒரு பொருளை வாங்கிக் கொள்ள, குறிப்பிட்டுள்ள ஊகத்தின் அடிப்படையிலான விலையில் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளப் போடப் படும் ஒப்பந்தமே முன்பேர வர்த்தகம் ஆகும்.

அதாவது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 1/1/2012 தேதியில் $.5500/= விலைக்கு வாங்கிக் கொள்கிறேன் என்று யூகத்தின் அடிப்படையில் ஒப்பந்தம் செய்துக் கொள்வது..

ஆணிவேர்: அந்த நாளில் குறிப்பிடப் பட்டுள்ள விலையை விட அதிகம் இருந்தால்?

நண்பர்: அது லாபம்.

ஆணிவேர்: ஒரு வேளை அது குறிப்பிடப் பட்டுள்ள விலையை விட குறைவாக இருந்தால்?

நண்பர்: அது நஷ்டம் என்று எடுத்துக் கொண்டாலும்.. அந்த ஒப்பந்தம் நஷ்டம் அடையாமல் பார்த்துக் கொள்ள ஹெட்ஜிங் என்ற ஒரு வகையை நாங்கள் கை ஆள்வோம்...

ஆணிவேர்: அது என்ன ஹெட்ஜிங்?

நண்பர்: அதாவது இன்னொரு ஒப்பந்தத்தில் வாங்கி, எந்த அளவுக்கு நஷ்டம் அடைந்ததோ அந்தளவு விலை ஏறிய உடன் விற்று விடுவோம்..

ஆணிவேர்: ஒரு நாளைக்கு தடாலடியாக விலை ஏறுமா?

நண்பர்: பங்கு சந்தை போல் இங்கு தடாலடியாக விலை ஏறாது.. ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று சதவிகிதம் விலை ஏற அனுமதிக்கப் படுகிறது.. அந்த குறிப்பிட்ட அளவு வந்தவுடன் விலை ஏற்றம் தடை செய்யப் படும்.

ஆணிவேர்: அப்படி என்றால் பத்து நாளைக்கு முப்பது சதவிகிதம் விலை ஏற முடியும். அப்படி தானே?

நண்பர்: ஏறக் குறைய அப்படி தான்.. ஆனால் முழுமையாக அப்படி நடக்க வாய்ப்பில்லை..

ஆணிவேர்: அப்படி என்றால் ஊக வணிகத்தால் விலை ஏறுகிறது என்று எதை வைத்து போராடுகிறார்கள்?

நண்பர்: ஊக வணிகத்தில் விலை நம் நாட்டு நிலவரம் வைத்து விலை நிர்ணயிக்கப் படுவதில்லை.. சர்வதேச சந்தையின் நிலைமையை வைத்தே உள்நாட்டு பொருட்களின் விலை நிர்ணயிக்கப் படுகிறது.

ஆணிவேர்: தற்காலிக தட்டுப் பாடை உருவாக்கி இங்கு பொருட்களின் விலையை ஏற்ற முடியுமா?

நண்பர்: நான் ஏற்கனவே கூறியது போல் தடாலடியாக உயர்த்த வாய்ப்பில்லை... கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்த முடியும். ஆனால் கட்டுப்பாடுகளும் அதிகம். அரிசி வகையாறாக்களில் பாசுமதி அரிசி மட்டுமே இந்த சந்தையில் கிடைக்கும்.. சாதாரண அரிசி கிடைக்காது... அது போல் கட்டுப்பாடுகள் அதிகம்...

ஆணிவேர்: இந்த வணிக முறையில் யார் யார் ஈடுபடலாம்?

நண்பர்: இந்திய நிரந்தர வருமான வரி கணக்கை வைத்து உள்ள யாரும் ஈடுபடலாம். நீங்கள் அடுத்து என்ன கேட்பீர்கள் என்று தெரியும். வெளிநாட்டினரும் ஈடுபடலாம், பாஸ்போர்ட் வைத்து கொண்டு.

ஆக
முட்டை என்பது சைவம் என்றாகிவிட்டது,
பீர் என்பது குளிர்பானம் என்றாகிவிட்டது..
பந்தயம் கட்டி விளையாடும் ரம்மி சூதாட்டம் இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறி விட்டது..
அதே போல் பங்கு சந்தையும் சூதாட்டம் அல்ல என்று காலம் காலமாய் சொல்லி வருவதை, இல்லை என்றே ஆளும் வர்க்கம் சொல்லி வருகிறது.


இதை முழுவதும் புரிந்து கொள்ள நான் இதே துறையில் ஒரு வருடம் இருந்தால் மட்டுமே முடியும் என்று என் நண்பன் கூறி விட்டான்.. ஆகையால் எனக்கு புரிந்த அளவுக்கு நான் இங்கு விளக்கி இருக்கிறேன்..

4.12.11

எப்பூடி...

பெட்ரோல் விலை குறைவதும், விலை ஏறுவதும் சர்வதேச எண்ணெய் சந்தையின் விலையை பொறுத்து என்று நம்பி கொண்டிருப்பவரா நீங்கள்...

நம் நாட்டின் பெட்ரோல் விலை உயர்வை தீர்மானிப்பது சிங்கப்பூர் நாட்டின் பெட்ரோல் விலை மட்டுமே என்ற ரகசியத்தை இன்று நாளிதழின் கட்டுரை அம்பலப் படுத்தி உள்ளது..

இத்தனைக்கும் நாம் சிங்கப்பூர் நாட்டில் இருந்து ஒரு சொட்டு பெட்ரோல் கூட வாங்கவில்லை என்று புலம்புகிறார் கட்டுரையாளர்..

மேலும் படிக்க...

http://www.thehindu.com/news/national/article2684791.ece

மேலும் பெட்ரோல் விலை குறித்த தகவல்களுக்கு

http://suryajeeva.blogspot.com/2011/09/blog-post_17.html


கமாடிடி மற்றும் முன் பேர வர்த்தகம் குறித்து பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன... இன்னும் ஒரு முழு வடிவம் பெறாததால்.. நாளை அல்லது அதற்க்கு மறு நாள் வெளி இடுவேன்...

2.12.11

சந்து பொந்துகளில் புகுந்து..

அணுசக்தி கட்டுப்பாடு இழப்பீடு மசோதா...
Nuclear Liability bill

இந்தோனேசியாவில் நடந்த மாநாட்டில், அமெரிக்க அரசின் பயத்திற்கு இந்திய அரசு எதுவும் செய்ய முடியாது என்றும்... அந்த பயத்தை நீக்க இந்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே மசோதாவை அமுல் படுத்த முடியும் என்றும் நமது பிரதமர் சூளுரைத்ததை பலர் கை கொட்டி ஆரவாரமாக கொண்டாடினர்...

நேற்று இந்து நாளிதழில் வெளியான கட்டுரைகளில் ஒன்று இந்த மசோதாவானது எப்படி இந்திய அரசின் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன் படுத்தி அமெரிக்க பன்னாட்டு முதலாளிகளுக்கு சாதகமாக உள்ளது என்று புட்டு புட்டு வைக்கிறது...

24 பிரிவின் கீழ் என்ன என்ன வரை அறுக்கப் பட்டு இருக்கிறது என்றால்

முதலில்

இழப்பீடு தொகை என்பது ஒப்பந்தத்தில் என்ன கூறியிருக்கிறதோ அல்லது எவ்வளவு இழப்பீடோ; இவற்றில் எது குறைவானதோ அதை அந்த நிறுவனம் கொடுத்தால் போதுமானது என்று அறிவுறுத்துகிறது...

உதாரணத்திற்கு
பாதிக்கப் பட்டவர்களுக்கு கணக்கிடப்பட்ட இழப்பீடு என்பது ஐந்து லட்சம் என்றால்,
ஒப்பந்தத்தில் ஒரு லட்சம் என்று இருக்கும் பட்சத்தில் சம்பந்தப் பட்ட நிறுவனம் இதில் குறைந்த தொகையை செலுத்தினால் போதுமானது..

இரண்டாவது..

அணு சக்தி கழகமானது ஒரு அணு உலைக்கான வாரண்டி நாட்களை ஐந்து வருடமாக வரை அறை செய்து வைத்துள்ளது... ஒரு வேளை விபத்தானது ஆறாவது வருடத்தில் நடந்தால் சம்பந்தப் பட்ட நிறுவனம் எந்த இழப்பீடும் தர வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது..

மூன்றாவது..

இந்த சட்டத்தில் எங்கும் சம்பந்தப் பட்டவர்களை நிர்ப்பந்தம் செய்ய எந்த விதியும் இல்லை என்றும் கூறி உள்ளார்.

கட்டுரையாளர் இவை அனைத்தையும் கூறி விட்டு, இந்த விதி 24 என்பதை நீக்க மக்கள் நலன் மீது அக்கறை உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் போராட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்..

http://www.thehindu.com/opinion/lead/article2675389.ece


ஆபத்தே இல்லைன்னு சொல்லி கிட்டு இருக்கிறோம், அப்புறம் ஏன்யா சட்டத்தில் இருக்கும் ஓட்டை பற்றி எல்லாம் கவலை பட்டு கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்...

30.11.11

சில்லறை வணிகத்தில்....?

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு குறித்து பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்... அந்நியர்கள் உள்ளே வரக் கூடாது என்று ஒரு தரப்பினரும், உள்ளே வரலாம் என்று ஒரு தரப்பினரும் பேசிக் கொண்டு உள்ளனர். இருவருமே ஒரு முக்கியமான பார்வையை பார்க்காமல் பேசுவது போன்று எனக்கு தெரிந்ததால், என் அறிவுக்கு எட்டிய வரை ஆணிவேர் பார்வையில் இந்த பதிவை பகிர்கிறேன்...

கமாடிட்டி மார்கெட் என்று அழைக்கப் படும் ஊக வணிகம் குறித்து முழு புரிதல் இல்லை என்றாலும், எனக்கு புரிந்த வரையில் இங்கு என் வாதத்தை முன் வைக்கிறேன்... தவறான கருத்து எனில் திருத்திக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்..

ஒன்று:

ஏற்கனவே இந்தியாவில் ஊக வணிகத்தில் அந்நியர்கள் முதலீடு செய்ய முழு கதவையும் திறந்து விட்டு உள்ளனர்.

அந்நியர்கள் மளிகை கடைகளையும் திறக்கும் பட்சத்தில் இது எப்படி அவர்களுக்கு சாதகமாக அமையப் போகிறது என்ற மாற்று சிந்தனை இது.
உதாரணமாக...

ஒரு கிலோ அரிசி 40 ரூபாய் விற்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
ஊக வணிகத்தில் வெறும் காகிதம் தான் என்பதால் எவ்வளவு கிலோ அரிசி வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற அடிப்படையில், நான் என்ன விலைக்கு விற்கிறதோ அந்த விலைக்கு வாங்கி கொள்கிறேன்.

பின்பு வெளி சந்தையில், என் மளிகை கடைக்கு தேவையான அரிசி என்று பல்லாயிரக்கணக்கான மூட்டை அரிசி வாங்கி அடுக்கி வைத்துக் கொள்கிறேன்.. ஆனால் விநியோகம் செய்யாமல் செயற்கையான தட்டுப்படை உருவாக்குவதின் மூலம் அரிசியின் விலையை இரு மடங்காக ஆகும் வரை காத்திருந்து, ஒரே நேரத்தில் ஊக வணிகத்தில் வந்த விலைக்கு விற்று லாபம் சம்பாதித்து விட்டு, வெளி சந்தையில் விற்பதை விட ஐந்து ரூபாய் குறைவாக விற்று லாபம் சம்பாதிப்பதோடு அல்லாமல் வாடிக்கயாளர்களையும் சம்பாதித்து கொள்கிறேன்..

அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்பவர்களுக்கு, நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

இரண்டாவது:

மொத்தமாக விவசாயிகளை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தி விரயம் இல்லாமல் உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்ப்பார்கள் என்ற பார்வையும் உள்ளது என்பதால்,
மேலே கூறிய காரணம் இங்கும் பொருந்துகிறது...

விவசாயிகளை இந்த பொருள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வதின் மூலம் செயற்கையான தட்டுப்பாடு உருவாக்க எதுவாக இருக்கும்...

மூன்றாவது:

முப்பது சதவிகிதம் உள்நாட்டு உற்பத்திகளை வாங்க வேண்டும் என்று அரசு கட்டாயப் படுத்த உள்விதி உள்ளது என்கிறது ஒரு அமைப்பு. ஆகையால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப் படாது என்றும் கூறுகின்றனர்.

அது ஏன் வெறும் முப்பது சதவிகிதம் என்ற கேள்வி மட்டும் மனதில் ஓடி கொண்டிருக்கிறது.

பொருளாதாரம் குறித்த புரிதல் கொஞ்சம் தலை சுற்றும் விஷயமாக உள்ளதால், சரியாக தான் புரிந்து கொண்டேனா என்ற குழப்பம் உள்ளது... ஆகையால் நண்பர்கள் என் பார்வை சரியாக இருக்குமா என்று தெளிவு படுத்தினால் உற்சாகமாக பொருளாதார பார்வையிலும் இறங்குவேன் என்று கூறிக் கொள்கிறேன்

27.11.11

மால்குடி சித்தன்

நீ ஏழையாக பிறந்தது உன் குற்றமல்ல...
ஆனால் நீ ஏழையாக இறப்பது உன் குற்றமே...


இப்படி ஒரு புது மொழி உண்டு

மால்குடி சித்தனின் சிந்தனை என்ன என்றால்..

இந்த புது மொழி ஆட்சியாளர்களின் தவறான கொள்கையால், அவதிப் படும் சோமாலிய மக்களுக்கும் பொருந்துமா?

சோமாலியா பஞ்சத்தால் வாடும் தேசம் என்று பெரும்பாலும் நினைத்துக் கொண்டு இருந்தாலும்.. இன்றைய சோமாலிய மக்களின் ஏழ்மை நிலைக்கு பஞ்சம் ஒரு காரணம் என்றாலும், மிக முக்கியமானது இது வரை ஆண்ட ஆட்சியாளர்களின் ஊழலும், தவறான கொள்கைகளும் தான்.. 

உதவி என்ற பெயரில் வளர்ந்த நாடுகள் செய்தவை அனைத்தும் உதவி புரிந்த நாடுகள் வளரவே உதவி  புரிந்தன. ஆக மேலும் மேலும் சுரண்டப் பட்ட மக்கள் இன்று வாழ்வாதாரம் இல்லாமல் நொடிந்து போய் உள்ளனர்...


ஒரு வேளை ஏழையாக இருக்க விருப்பம் இல்லாமல் தாய் நாட்டை விட்டு பிற நாட்டுக்கு சென்றிருக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ?


மேலும் படிக்க
http://www.cato.org/pubs/pas/pa-205.html

மேற்கண்ட கட்டுரையை படிக்கும் பொழுது இந்தியா மனதில் வந்து சென்றதை மறுக்கவில்லை...

26.11.11

இறந்தும் மிரட்டுகிறார்

இந்திய சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த பகத் சிங்கை கண்டு இன்றும் நம் ஆட்சியாளர்கள் நடுங்கி கொண்டிருப்பது இன்று வெளிவந்த ஒரு செய்தி குறிப்பில் வெட்ட வெளிச்சமாகிறது...

சிறு வயதிலே இறந்த ஒரு தீப் பிழம்பு பகத் சிங் என்றால் அது மிகையல்ல..

அந்த வரலாற்று நாயகன் குறித்து பல திரைப் படங்கள் வந்தாலும்.. அவற்றில் உண்மை கலக்கவில்லை என்பது இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மத்திய திரைப்பட சான்றிதழ் குழு இன்கிலாப் என்ற குறும்படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுத்து விட்டது.

காரணம், அந்த படத்தில் தேசிய எதிர்ப்பு உணர்வுகள் உள்ளதாக கூறியுள்ளனர்.

இதனால் 42வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள ஒருமித்த மனதாக அனைத்து தேர்வாளர்களால்  தேர்வு செய்யப் பட்ட இந்த திரைப்படம் திரை இடப் படப் போவதில்லையாம்..
http://www.thehindu.com/arts/cinema/article2660359.ece

பகத் சிங் 1928  ஜூன் மாத கீர்த்தி இதழில் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகளை பார்க்கலாம்..

"மதக் கலவரங்கள் அனைத்திற்குமான நிரந்தர தீர்வு என்பது இந்தியாவின் [இந்திய மக்களின்] பொருளாதார வளர்ச்சியிலேயே உள்ளது.. ஏனென்றால் பொதுமக்களின் பொருளாதார நிலைமை மிக மோசமானதாக இருக்கிறது. இங்கே ஒருவருக்கு வெறும் நாலணாவைக் கொடுத்து மற்றொருவரை தாக்கச் செய்ய முடிகிறது. பட்டினியில் கிடக்கும் மக்களால் உயர்ந்த கொள்கைகளை பின்பற்ற முடியாது. தான் உயிர் வாழ்வதற்காக ஒருவன் எந்த எல்லைக்கும் செல்வான் என்பது உண்மையே.

ஆனால் பொருளாதார வளர்ச்சி என்பது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் கடினம். ஏனென்றால் நாம் ஆங்கிலேய பேரரசால் ஆளப் படுகிறோம். நாம் வளர்வதற்கு அவர்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே மக்கள் இந்த அரசாங்கத்தை வெறுக்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சியை தூக்கி எரியும் வரை நமக்கு ஓய்வு உறக்கமில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்."

மற்றொரு கட்டுரையில்..

"அதிகார வர்கத்திடம் ஜாக்கிரதையாக இருங்கள். அது உங்களுக்கு ஒரு நாளும் உதவி செய்யாது. மாறாக அது உங்களை பகடைக் காயை போல் பயன்படுத்தும். நீங்கள் சுதந்திரம் இல்லாமல் இருப்பதற்கும் உங்களது வறுமைக்கும் மூல காரணம் இந்த அதிகார வர்க்கமும் முதலாளி வர்க்கமே. எனவே அவர்களை ஒரு போதும் நம்பாதீர்கள்."

கேளாத செவிகள் கேட்கட்டும்
தொகுப்பும் தமிழும் த.சிவக்குமார்.
நெம்புகோல் பதிப்பகம்.
http://ieyakkam.blogspot.com

விடுதலைப் பாதையில் பகத் சிங்
தொகுப்பு சிவவர்மா
பாரதி புத்தகாலயம் வெளியீடு.

இந்த புத்தகத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டது ஒன்றே ஒன்று தான், அது பிரிட்டிஷ் ஆட்சியாக இருந்தாலும் சரி, இன்றைய _______ ஆட்சியாக இருந்தாலும் சரி... பகத் சிங்கை புரிந்து உள்வாங்கிக் கொண்டு நாம் முன்னேறுவதில் தான் நம் விடியல் உள்ளது.

23.11.11

Uranium

Uranium Mining: அணு ஆற்றலுக்குப் பயன்படும் தனிமமான யுரேனியத்தால் பாதிக்கப்பட்ட ஜடுகோடா (ஜாட்கண்ட்) பொதுமக்கள்

இதயம் பலகீனமானவர்கள் மேலே படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் 

எனது தோழர். கதிரேசன் எனக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சல் உங்கள் பார்வைக்கு 
 
 
Uranium-poisoned villagers point to Irresponsible India













In pictures: Living by India's uranium mine

 
Why are people affected?

 

'Cannot speak or walk'

 

Guria and her father

 

23 years on a bed


Problems through life



Ore



Washing spinach

 

'Deplorable' situation

 

NUCLEAR POWER - URANIUM CRISIS

 

Eyewitness: Radioactivity doesn't stop at the mines in Jaduguda

 

The most affected Durku village that falls within the Jaduguda site . People living in this belt are affected by serious illnesses like thalassemia , cancer , retardation and many incurable skin diseases 

due to Uranium radiation since many years . March 11 , 2007

 

Boy suffering the reward of radiation.....

 

Road to jaduguda

 


A deformed existence

 

Indian Tribes Dig In to Fight Uranium Mine

 

Photos of radiation affected children in Jadugodda in Jharkhand, India.



Toxic Mining in Tribal India


Muthamizh
Chennai

22.11.11

கழுகு பார்த்த பார்வை

ஆபத்தான உணவா இந்த பரோட்டா????? ஒரு திடுக் பகிர்வு என்ற தலைப்பில் ஒரு பதிவை கழுகு வலை தளத்தில் பார்த்ததும்... நானும் வழக்கமான ஒரு விழிப்புணர்வு பதிவு என்று தான் நினைத்தேன்...


சிந்தனைகளில் சுழல சுழல, என் புத்திக்கு மிகவும் மெதுவாக உரைத்தது ஒரு விஷயம்.. பரோட்டா மட்டுமா மைதாவில் செய்கிறார்கள்...

குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும்..
பிஸ்கட்
கேக்
நூடுல்ஸ்
மற்றும் அனைத்து பேகரி தின்பண்டங்களும் மைதாவில் தான் செய்கிறார்கள்.

சரி, என்னடா விஷயம் என்று என் நண்பனை அழைத்தேன்...
ராமு என்னும் என் நண்பன் முனைவர் ஆக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான்..
அவனை அணுகினேன்...

இருவருக்கும் இது புது விஷயமாக இருக்கிறது என்று ஆராய்ந்தோம்.. விளைவு யூக அடிப்படையில், லாஜிக் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்.. இதற்க்கு மேல் என்ன செய்வது, எப்படி செய்வது, என்பதை விவாதத்துக்கு விடுவோம் என்ற அடிப்படையில் இங்கு நாங்கள் அறிந்ததை ஒப்படைக்கிறோம்...

கழுகு வலைதளத்தில் கூறியது போலவே வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் மைதாவை வெண்மையாக்க benzyl  peroxide அல்லது அதற்க்கு ஈடான எதோ ஒரு ரசாயனத்தை வைத்து  வென்மையாக்குகிறார்கள்.
http://www.healthy-eating-politics.com/white-flour.html

இதனால் அந்த மைதாவில் உருவாகும் உப பொருள் தான் alloxan . என்ற  வேதியியல் பொருள். இது எலி மற்றும் பிற மிருகங்களின் கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் பீடா அணுக்களை அழிக்கும் தன்மை கொண்டது...

ஆனால் இது மனிதன் மீது எந்த வித குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது என்பது சரியான முறையில் கணிக்கப் படவில்லை என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். ஆனால் ஒரு முடிவு குறிப்பிடுவது சுவாரசியமான பதிலை தருகிறது. அதாவது மனிதனுக்கு alloxan  கொடுக்கப் படும் அந்த தருணத்தில் மட்டும் இன்சுலின் சுரப்பது இல்லை என்றும் மீண்டும் சில நேரங்களில் சுரப்பது தொடர்கிறது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/7716136

பீடா அணுக்களின் ஆயுள் காலம் மூன்று முதல் ஆறு நாட்கள், சிறு குழந்தைகளுக்கு ஆறு முதல் பன்னிரண்டு நாட்களாக இருக்கும். எவ்வளவு அணுக்கள் இறக்கிறதோ அவ்வளவு அணுக்கள் மீண்டும் உற்பத்தி ஆகி விடும்.. ஆனால் உற்பத்தி திறன் குறைய ஆரம்பிக்கும். இன்சுலின் சரியாக உடலில் எடுத்துக் கொள்ளப் படவில்லை என்றாலும் இந்த புது பீடா அணுக்கள் பிறக்கும்..

நாளடைவில் இந்த இளம் வயதில் உற்பத்தி அதிகரிப்பு, பிற்கால நாட்களின் உற்பத்திக்கு உலை வைக்கும்.. அதாவது சாதாரணமாக 60  வயதில் எதிர்பார்க்கப் படும் நீரிழிவு நோய்.. 30 வயதில் உருவாகும் என்பது தான் எங்கள் முடிவு.. மேலும் இப்பொழுது இந்த வயதிலேயே நீரிழிவு நோய் வருகிறது என்றும் பல முன்னணி மருத்துவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்..

1919  ஆம் வருடம் வெளி வந்த இந்த விஷயம் இன்னும் இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் எந்த வித ஆராய்ச்சிக்கும் என் உட்படுத்தப் படவில்லை என்று தான் யோசனையாய் இருக்கிறது...

வேர்கடலை எண்ணெய் மூலம் புற்று நோய் வரும் காரணிகள் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் என் மற்றொரு நண்பர் ஆனந்த் ராஜ் அவர்களிடமும் இந்த செய்தியை கூறி ஆராய சொல்லி இருக்கிறேன்...

குழந்தைகள் விரும்பி உண்ணும் அனைத்து பொருட்களும் மைதாவில் செய்யப் படுகிறதே என்று தான் உறுத்துகிறது...

உங்கள் சிந்தனைகளையும்,  உங்கள் கருத்துக்களையும், என்ன செய்யலாம் என்ற ஆலோசனைகளையும் பதிவு செய்யுங்களேன்...

20.11.11

இந்த வாரம்

இந்த வாரம் நடந்த அரசியல் விவாதங்களில் சில, சுவையாக இருந்தது...
ஆனால் பெரும்பாலானோர் தவறான பார்வையில் இருப்பதாக எனக்கு படுகிறது...

ஒன்று:

மல்லய்யா, அரசின் தவறான கொள்கைகளால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும்.. அதனால் அரசு அவருக்கு உதவி புரிவது தப்பில்லை என்றும்... மிகவும் விலை குறைவாக விமான சேவை நடத்துவது நடுத்தர மக்களுக்கு உதவி புரியவே என்றும்.. ஆகையால் அவருக்கு அரசு கை தூக்கி விட வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்... இங்கு பலர் அவரின் ஆடம்பரமான வாழ்வை பார்க்காமல் பெட்ரோல் விலை வாசி மட்டுமே அவர் வீழ்ச்சிக்கு காரணம் என்று கண்டு பிடித்துள்ளனர்...

ஆணிவேர் பார்வை:

உங்கள் வீட்டருகே இருக்கும் ஆட்டோ காரர்கள் மக்கள் நலன் கருதி மிகவும் சிறிய தொகையை கட்டணமாக வாங்கி நொடித்து போய், அரசு தான் காரணம் என்றால் என்ன சொல்வீர்கள்?
ஆட்டோ காரர்கள் என்றால் சண்டைக்கு செல்லும் இவர்கள் விமான நிறுவனம் என்றால் இரக்கப் படுவது எதனால்?

இரண்டு:

பால் மற்றும் பேருந்து கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றும், ஆனால் தவிர்த்திருக்கலாம் என்றும், தனியார் மயமாக்கி இருந்தால் சேவை தரமாக இருந்திருக்கும் என்றும் பலர் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் எதோ ஒரு மாற்றத்தை தேடி அம்மையாருக்கு ஓட்டு போட்டவர்கள் என்பது இவர்களின் ஆதங்கமும், கோபமும், உணர்ச்சி வயப் பட்ட நிலையும் காட்டி கொடுக்கிறது..

ஆணிவேர் பார்வை:

பேருந்து கட்டண உயர்வு கண்டிப்பாக வேண்டும் என்று பல்வேறு தனியார் பேருந்து முதலாளிகள் பல ஆண்டுகளாய் கேட்டுக் கொண்டு இருந்ததை பல்வேறு தரப்பினரும் மறந்து விட்டார்கள். மேலும் தனியார் பால் நிறுவனங்களும்  பால் விலையை ஏற்றினால் நன்றாக இருக்கும் என்று எண்ணியிருந்திருக்கிறார்கள் என்பது தனியார் பால்களின் விலையை விட ஆவின் விலை ஏற்றியதை வைத்து கணக்கு போட்டுக் கொள்ளலாம்..

தனியார் முதலாளிகளின் சுயநலமே இந்த தேவை இல்லாத விலை ஏற்றம்.

மூன்று:

அணு உலை அமைக்க கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியதால் , பதிலுக்கு அணு உலை அமைத்தால் தான் மின்சாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பல சிறு முதலாளிகள் அணு உலை அமைய வேண்டும் என்று போராட்டம் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்..
அணு உலை அமைய வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் வைத்திருக்கும் banner  ஐ பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது...

ஆணிவேர் பார்வை:

கண் தெரியாதவன் யானை பார்ப்பது போல் உருவகப் படுத்தி வரையப் பட்ட கார்டூனை துணைக்கு அழைத்து அணு உலை எதிர்ப்பாளர்களை கிண்டல் செய்யும் அவர்கள். அதில் பொதிந்திருக்கும் மர்மத்தை கண்டு பிடிக்காமல் விட்டது வேதனையை தருகிறது...


கூடங்குளம் அணு உலை என்பது ஒரு யானை போல் என்றும் மதம் பிடிக்கும் வரை எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்றும், மதம் பிடித்து துவம்சம் செய்ய ஆரம்பித்தால் கட்டுக் கடங்காத சேதம் இருக்கும் என்றும் புனையப் பட்ட கார்டூன்..

18.11.11

முதுகில் குத்துவது எப்படி?

PFRDA [Pension Fund Regulatory and Development Authority] மசோதா

பல்லாயிரக் கணக்கான ஊழியர்களின் பென்ஷன் பணத்தை, பங்கு சந்தையில் முதலீடு செய்ய உருவாக்கப் படும் மசோதா, வரும் குளிர் கால கூட்டத் தொடரில் சட்டமாக இயற்றப் படும் என்றும்...

இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் 26 % முதலீடு செய்ய வழிவகை செய்யப் பட்டுள்ள போதிலும், இந்த வரிகள் அந்த சட்டத்தில் இருக்காது என்றும் கூறி உள்ளார்கள். இதற்க்கு முதன்மையான காரணம் பிற்காலத்தில் எந்த வித சட்டமும் இயற்றாமல் அதன் அளவை கூட்டிக் கொள்ளவே என்றும் பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன...

மேலும் இதன் மூலம் உத்தரவாதமான தொகை சம்பந்தப் பட்ட தொழிலாளிக்கு கிடைக்காது என்று அதில் குறிப்பிடப் பட்டுள்ளது...
http://articles.economictimes.indiatimes.com/2011-11-16/news/30405824_1_fdi-cap-insurance-sector-pension-sector

இந்த திட்டத்தில் உள்ள தொழிலாளிகள் பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக இடது சாரிகள் இந்த சட்டத்தை எதிர்ப்பதாக அறிவித்துள்ளனர்...

இதில் கொடுமை என்ன என்றால் இந்த திட்டத்தில் பல கிராமத்து மக்களும் இணைந்திருக்கிறார்கள் என்பதே.. வருங்கால கனவுகளுடன் விவசாய வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் தனியார் நிறுவனங்களின் மூலம் சேர்ந்துள்ளனர்... அவர்களுக்கு இந்த மாதிரி சட்டம் நிறைவேற்றப் படப் போகிறது என்று தெரிந்திருக்குமா என்ற கேள்வி இன்று என் தூக்கத்தை கெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
http://en.wikipedia.org/wiki/New_Pension_Scheme_%28India%29
http://pfrda.org.in/writereaddata/eventimages/Aggregato20List8968663130.pdf

நீர் வீதி

வெனிஸ் நகர நீர் வீதி, பல படங்கள் இங்கு எடுக்கப் பட்டு நம்மை ஆ என்று வாய் பிளக்க வைத்துள்ளது...


என்னங்க பெரிய வெளிநாடு, நம் நாட்டுக்கு ஈடு வருமா?


நம்ம சிங்கார சென்னை தான் இது...

முக்கிய செய்திகள்

இன்றைய மிக மிக முக்கிய செய்திகள்:

சுகப் பிரசவம் ஆக ஒருவர் உடல் உழைப்பு உள்ளவராகவோ, அல்லது இளைமையானவராகவோ  இருக்க வேண்டிய அவசியம் இல்லை..

-ஐஸ்வர்யா ராய் பச்சன் 

அவள் எனக்குத் தான்: காதலால் ஏற்பட்ட மோதல்: சக மாணவனை குத்திக் கொன்ற +2 மாணவன் கைது
 http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=65366  

மேற்கு இந்திய தீவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா வென்றது..
http://www.thinaboomi.com/2011/11/17/8120.html 

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்... -அண்ணா ஹஜாரே கோரிக்கை
http://www.dailythanthi.com/article.asp?NewsID=688591&disdate=11/18/2011

தாஜ் மகாலை பாதுகாப்பது எங்கள் கடமை - சுப்ரீம் கோர்ட்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=350302

அவ்வளவு முக்கியம் இல்லாத செய்திகள்:

கூடங்குளம் மக்கள் போராட்டம்..

பால் விலை வாசி உயர்வு..

பெட்ரோல் விலை வாசி உயர்வு..

பேருந்து கட்டண உயர்வு..

தமிழக மீனவர்கள் பிரச்சினை..

குஜராத் மீனவர்கள் பிரச்சினை..

பாகிஸ்தான் மீனவர்கள் பிரச்சினை...

மக்கள் நலப் பணியாளர் போராட்டம்..

மின்சார கட்டண  உயர்வுக்கு அச்சாணி...

முக்கிய செய்திகளை விட முக்கியமில்லா செய்திகள் அதிகமா இருக்கும் போலிருக்கே..


15.11.11

ஓ போடு

சென்னை மாநகரம் உருவாக்கும் குப்பைகளை கொண்டு அருமையாக சென்னை, மின்சார தன்னிறைவை அடையலாம் என்று தமிழ் நாட்டை சார்ந்த 81  வயதை எட்டியுள்ள ஒரு பொறியியல் வல்லுனரான திரு.சிவப்பிரசாத் குறித்து இன்று வெளியான டெக்கான் குரோனிகள் நாளிதழில் இரண்டாம் பக்கத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டின் அனைத்து துறைகளின் கதவுகளையும் தட்டி, எந்த விடையும் கிடைக்க வில்லை என்றாலும் விடாமல் தன முயற்ச்சியை தொடர்ந்த படி உள்ளார்.

இவரது தொழில் நுட்பப் படி மலேசியா அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி எழுநூறு டன் எடையுள்ள குப்பைகளை கொண்டு எட்டு மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிகிறதாம்...

இதற்க்கு ஆகும் செலவுகள் குறித்து எந்த விதமான தகவல்களும் இல்லை.
1995  இல் நடைப் பெற்ற ஐ.நா ஆசிய பசிபிக் பகுதியின் சுற்றுச்சூழல் கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு அமர்க்களமான வரவேற்ப்பு கிடைத்தாக அந்த செய்தி குறிப்பு சொல்கிறது.
http://panchabuta.com/tag/k-s-sivaprasad/

சென்னையின் ஒரு நாள் குப்பையின் எடை 3200  டன் என்று  சென்னை மாநகராட்சியின் வலை தளம் அறிவிக்கிறது.
http://www.chennaicorporation.gov.in/departments/solid-waste-management/index.htm


13.11.11

அருகி வரும் இனம் எது?

வழக்கமாய் அமெரிக்காவில் மட்டுமே வெளிப்படையாய், பெரும் பணக்காரர்களுக்கு பல சலுகைகள் அளித்து காப்பாற்றி வந்தனர்.

அதன் எதிரொலி தான் இன்று வால் தெரு முற்றுகை போராட்டம் என்பதை காண முடிகிறது..

இத்தனை ஆண்டுகளாய் இந்தியாவில் திரை மறைவில் நடந்த இந்த கூத்துக்கள், இன்று வெட்ட வெளிச்சமாய் அரங்கேறுமா என்ற எதிர்பார்ப்பு எனக்குள் எழுந்துள்ளது.

விஜய் மல்லய்யா என்ற மாபெரும் சக்தி இன்று தவறான பொருளாதார அணுகுமுறையால் பல கோடி ரூபாய்கள் கடனில் தத்தளிப்பதாகவும், அவர் அரசின் தவறான அணுகுமுறையால் தான் நஷ்டம் அடைந்தேன் என்று கூறி அரசின் கையை எதிர்பார்த்தும் காத்திருப்பதாக இந்து நாளிதழில் வெளிவந்துள்ள செய்திகள் குறிப்பிடுகிறது...

சுரண்டி கொழுத்ததால் வந்த ஆடம்பரம் இன்று மல்லய்யாவை ஆட்டம் காண வைத்தாலும், அரசு என்றும் போல் அவரை காப்பாற்றும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை...

அமெரிக்காவில் உள்ள ஒரு பணக்காரர், என் ஊழியர்கள் கட்டும் வரியை விட, நான் குறைவாக கட்டுகிறேன் என்று கூறி...

பணக்காரர்கள் என்பவர்கள் அழிந்து வரும் இனமல்ல[Rich are not an endangered species], ஆகையால் அவர்களுக்கு உதவி தேவை இல்லை என்று வெளிப்படையாக கூறியதை நம் ஆட்சியாளர்கள் நினைத்து பார்ப்பார்களா என்பது கேள்விக் குறியே...

http://www.thehindu.com/news/national/article2622215.ece

12.11.11

நிபுணர்

இன்று இணையத்தில் மிகப் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறார், நமது முன்னாள் ஜனாதிபதி...

அவர் வெளியிட்ட அறிக்கையில் ஒரு பொய்யை ஏற்கனவே ஒரு பதிவில் ஆணிவேர் அம்பலப் படுத்தி உள்ள நிலையில் இன்று வெளி வந்துள்ள ஒரு செய்தி இன்னும் ஒரு பொய்யை அம்பலப் படுத்தி உள்ளது அணு ஆற்றல் கட்டுப்பாட்டு குழு [Atomic Energy Regulatory Board].

அதாவது ஏற்கனவே இருக்கும் பாதுகாப்பு திட்டங்களுடன், நடமாடும் தன்மை உள்ள மின்சார உற்பத்தி கருவியும், நீர் நிலையமும் இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளுக்கும் அமைக்கப் பட வேண்டும் என்று கூறியுள்ளனர்...

இது கூடங்குளத்திர்க்கும்  பொருந்தும் என்பதால் நூறு சதவிகித பாதுகாப்பு உள்ளதாக நம் முன்னாள் ஜனாதிபதி எவ்வாறு கூறினார் என்று சாதாரணமாகவே கேள்வி எழும்புவதை, மேலும் பாதுகாப்பு இருப்பதில் தவறில்லையே என்று பதில் அளித்திருக்கிறார் நம் முன்னாள் ஜனாதிபதியின் உதவியாளர்.

மேலும் இங்கு தோய்வில்லாமல் நடக்கும் போராட்டத்திற்கு எங்கிருந்து பொருளுதவி வருகிறது என்று மத்திய அரசு விசாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் சொல்கின்றனர்...

விஞ்ஞானி என்றால் தான் ஒரு விஞ்ஞானியை விமர்சிக்க வேண்டும் என்றால்,
பொருளாதார நிபுணர் என்றால் தான் ஒரு பொருளாதார நிபுணரை விமர்சிக்க முடியுமா என்று கேள்வி எழும்புகிறது...

விலைவாசியை கட்டுப் படுத்த முடியாது என்றும், பணம் மரத்திலா காய்க்கிறது என்றும் கேட்ட நம் பிரதமர், பொருளாதார மேதை தானே...

http://ibnlive.in.com/news/kudankulam-protesters-demand-white-paper/201771-3.html

11.11.11

மால்குடி சித்தன்

நாடி ஜோதிடம், பழங்கால ரிஷிகள் எழுதிய ஓலை சுவடிகள் வைத்து எதிர்காலத்தை சொல்வார்கள். இவை பிரபலமான இடங்கள் வைத்தீஸ்வரன் கோவிலும் மற்றும் காஞ்சிபுரம்... இது மட்டும் அல்லாமல் பல்வேறு இடங்களில் கிளைகள் என்று வைத்து வியாபாரமும் காண கச்சிதமாய் நடந்து கொண்டிருக்கிறது...

சித்தனின் சிந்தனை என்ன என்றால்,

இவ்வளவு பழமை வாய்ந்த ஓலை சுவடிகளை ஏன் இன்னும் அரசாங்கத்தின் அங்கமான தொல்பொருள் துறை எடுத்துக் கொள்ளவில்லை?

தொல்பொருள் துறை இவ்விஷயத்தில் ஏதாவது முயற்சி எடுத்து இருக்கிறார்களா?

என் நண்பர் ஒருவர், பூகம்பம் போன்ற நிகழ்ச்சிகளை கூட கணித்து வைத்திருப்பார்கள் தானே என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறாராம்...

நாடி ஜோதிடம் என்ற இந்த வித்தையை நான் நம்பவில்லை என்றாலும் இந்த கேள்விகள் என் மனதை துளைத்து கொண்டு இருக்கின்றன...

பதில்கள், பின்னூட்டம் இடுபவர்களுக்கு தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில்...

திருக்குறள் போன்ற பல பழம்பெரும் நூல்களின் மூல ஓலை சுவடிகள் அந்த ஓலை சுவடிகளின் கூட்டத்தில் இருக்கலாம் என்று யாருக்கும் இது வரை சந்தேகம் எழவில்லையா?

நண்பரின் கடிதம்

மக்கள் சக்தி கட்சியின் பொறுப்பாளர்களில் ஒருவரான என் தோழர் அனுப்பிய கடிதம் உங்கள் பார்வைக்கு.. 

-------------------------------

சாதரண மக்களின் உயிர்களையும் உண(ர்)வுகளையும் ஒடுக்க / அழிக்கத் துடிக்கின்ற பிரதிபலனுக்காய் இயங்குகின்ற பிரதிநிதித்துவ சனநாயகம், பார் உயிர்கள் அனைத்தும் என்றென்றும் வளமாய் வாழ வழித்தேடி போராட்டக் களத்தில் இருக்கும் மக்கள் சனநாயகத்தின் முன் மண்டியிடும் நாள் வெகுதொலைவில் இல்லை!

மத்திய அரசே! மாற்றான் கைகூலியே!

அணுவிற்கு எதிரான எங்கள் போராட்டம்
அணுகுண்டு போட்டு ஒடுக்க நேர்ந்தாலும்
அனுதினமும் களமாடி உங்கள் கடைசிசிசி....
அணுகுண்டை உண்டாவது எம்மவர்க்கும்

அடுத்த தலைமுறைக்கும் ஆவன செய்யாது அயரமாட்டோம்!
அணு உலையை மாய்க்கும்வரை ஓயமாட்டோம்! 

அஞ்சினால் வரலாறு படைக்க முடியாதாம்... ஆம்
அகிலத்திற்கே ஆபத்தை விளைவிக்கும்

அணு உலைகளை அழித்தொழிக்க 
அதிகார மையங்களுக்கு பயந்து ஒதுங்கினால்

அருந்தமிழர்க்கு மட்டுமல்ல அகில உயிர்களுக்கும் 
அச்சமில்லா வாழ்வை உறுதிசெய்யும் வரலாறு நிகழ்ந்திடுமா?

அணு உலையை மூடாமல் 
கூடங்குளத்திலிருந்து கூட்டத்தை 
களையமாட்டோம் என அறைகூவலிடும்
அஞ்சா நெஞ்சர்களுக்கு 
உயிர்க்கருணை உள்ளங்களுக்கு 
தலைவணங்குகிறோம்!

சகப்போராளியாக

கன். மோகன்
91500 40096

தற்காலிகமாக தேச இறையாண்மை என்ற பெயரில் அவர்களை அடக்கி ஒடுக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வருகிறது. அது கனன்று கொண்டு இருக்கும் தீப்பொறியை பரவ செய்யும் என்பதை தவிர வேறு எதுவும் செய்யப் போவதில்லை என்பது என் எண்ணம்...

9.11.11

யாரை பழிவாங்குகிறார்கள்?

மக்கள் விரோத திட்டங்களை கட்டவிழ்த்து விடுவதை தமிழகத்தில் ஆளும் கட்சிகள் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பது தெரிந்ததே...

இன்று பதவி நீக்கம் செய்யப் பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் குறித்து விரிவான கட்டுரை கீழ்காணும் சுட்டியில் வெளியாகி உள்ளது.. உங்கள் பார்வைக்கு...


இதை ஒட்டி முகநூல் பக்கங்களில் பரவும் புகைப்படம் உங்கள் பார்வைக்கு...
பெரிதாக பார்க்க படத்தை சுட்டவும் 

8.11.11

முடியுமா? முடியாதா?

"முடியும் என்று நினைப்பவனால் தான் வரலாறு படைக்க முடியும்..."

இது யாருக்கு சொல்லப் பட்ட அறிவுரை என்று தெரியாது...

திரு. அப்துல் கலாம் அவர்களே...

எங்களால் அணு உலை வராமல் தடுக்க முடியும் என்று நினைத்தால் வரலாறு படைக்க முடியும் அல்லவா...

போராடும் மக்களுக்கு சொல்லும் பதிலை...
முடியாது, தெரியாது என்று சொல்லும் ஆட்சியாளர்களிடம் சொல்லுங்களேன்...

விலைவாசியை உடனடியாக கட்டுப் படுத்த முடியாது... கட்டுப் படுத்த எந்த மந்திர கோலும் இல்லை.
-பிரணாப் முகெர்ஜி.

பெட்ரோல் விலை ஏற்றாமல் இருக்க முடியாது... ஏனெனில் பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கின்றன.
-முரளி தியோரா.

ஏழ்மை கோடு என்பது ரூபாய் 26 மற்றும் 32 என்று முடிவெடுத்ததை திருப்பி பெற முடியாது.
- மோன்டேக்

டக்லஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது. ஏனெனில் இரு நாட்டு உறவுகள் பாதிக்கும்.
- இந்திய அரசு.

இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தை தகவல் உரிமை சட்டத்தில் சேர்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
- பரூக் அப்துல்லா, சரத் பவார்.


இப்படி அடுக்கி கொண்டே போகலாம்...
முடியும் என்று நினைத்து முயற்சி செய்தாலும் சரி,
இந்த வழியில் முடியாது என்று நினைத்து வேறு வழியில் முயற்சி செய்தாலும் சரி.
வரலாறு படைக்க முடியும்...

அணு உலை மட்டுமே மின்சார தேவையை பூர்த்தி செய்யும், பிற மின்சாரங்கள் பூர்த்தி செய்யாது என்று அதை பற்றி ஆராய கூட முடியாது என்றால் வரலாற்றில் உங்கள் பெயர் கண்டிப்பாக இருக்கும், எதிர்மறை எண்ணத்துடன்.

பாலைவனத்தில் சூரிய ஒளி மூலமாகவும், கடலில் நிறுவும்  காற்றாலை மூலமாகவும், கடலலை மூலமாகவும் கண்டிப்பாய் மின்சார தன்னிறைவை அடைய முடியும் என்று நினைக்கிறோம் அணு மின்சாரம் வேண்டாம் என்று போராடும் நாங்கள்..

முடியாது என்கிறீர்களா நீங்கள்?

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2608482.ece