politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

19.12.10

இந்திய கூரை ஒழுகுமா?


விக்கி லீக்ஸ், கடந்த ஒரு மாதமாக ஊடகங்களுக்கு தீனி போட்டு கொண்டிருக்கும் ஒரு அமைப்பு..
அமெரிக்காவின் ரகசியங்களே இப்படி நாறுகிறதே...
நம்ம நாட்டு ரகசியங்கள்....?
இப்படி தான் பலர் மனக் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்...
எல்லா நாட்டு அரசாங்கங்களும் பீதியில் இருக்க நம்ம நாட்டு ஆட்சியாளர்கள் மட்டும் தப்பு தாளங்கள் ரஜினி போல் இதுக்கு போய் அலட்டிக்கலாமா என்று விசில் ஊதி திரிந்து கொண்டிருக்கிறார்கள்...
இவர்கள் இப்படி இருக்க காரணம்..
1. நம்ம நாட்டு மக்களக்கு மறதி ஜாஸ்த்தி..
2. ஒரு ஓட்டுக்கு 500 ருபாய் சேர்த்து கொடுத்தால் மன்னித்து விடுவார்கள்...
3. நம்ம நாட்டுல டாகுமென்ட் எங்கப்பா இருக்கு.. எடுக்க?

ஆதர்ஷ் ஊழலில் முக்கியமான ஆவணங்களை காணவில்லை என்று சிபிஐ முடியை பிய்த்து கொண்டு திரிகிறார்கள்..
பல ஆண்டுகள் நிலப் பதிவு ஆவணங்கள் தரமில்லாத cd யில் பதிவு செய்ததால் இப்பொழுது கர்நாடக அரசாங்கம் முழி பிதுங்கி திரிகிறார்கள்..
அடிக்கடி எரிந்து போகும் கோப்புகள்..
central server இல்லாத அரசாங்கம்
என்று ரகசியங்கள் வெளியே போகாமல் காப்பாற்ற எங்களுக்கு தெரியும் என்று மார் தட்டி கொள்கிறார்கள் 1947 லிருந்து ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள்..
அட
இதுக்கு போய் அலட்டிக்கலாமா?

14.12.10

வா வாத்தியாரே...


நேற்று deccan chronicle செய்தி தாளில் ஒரு செய்தியை பார்த்தேன்.. RTE சட்டம் அமுலுக்கு வந்தால் தனியாக TUITION எடுப்பது தடை செய்ய படும் என்றும், இதனால் மாணவர்கள் பாதிக்கபடுவார்கள் என்றும் பெரிதும் கவலை பட்டிருந்தனர்.. அதில் ஒரு ஆசிரியர் பட்ட கவலை தான் என்னை இந்த தலைப்பில் எழுத வைத்துள்ளது..
அவரது வகுப்பில் 40 மாணவர்கள் உள்ளனராம், ஆகையால் தனி தனியாக கவனம் செலுத்த முடிவதில்லையாம், ஒரு வகுப்பில் செய்ய முடியாததை அவர் பள்ளி முடிந்ததும் இன்னோரு வகுப்பு எடுத்து சரி செய்து விடுகிறாராம், இப்படி கூறிய இவர் தன்னை அறியாமல் ஒரு உண்மையையும் உடைத்து விட்டார், பள்ளியில் வாங்கும் சம்பளம் போதவில்லை என்றும் இப்படி தனியாக வகுப்பு எடுப்பதில் தான் இவர் குடும்பம் நடத்துகிறார் என்றும் பட்டவர்த்தனமாக கூறி உள்ளார்...
முதலில் ஆசிரியர்கள், தங்களது அறிவு திறனை பெருக்கி கொள்ள வேண்டும்...
இன்னும் பல தமிழ் ஆசிரியர்களுக்கு தமிழ் எங்கள் தெரிவதில்லை..
அது அவர்கள் தவறில்லை..
நம் சமூகம் அப்படி..
இன்னும் பகத் சிங்கை தீவிரவாதி என்று எண்ணிக் கொண்டிருக்கும் எத்தனையோ ஆசிரியர்கள் உள்ளனர்...
ஆகையால் ஆசிரியர்கள் அவர்கள் எடுக்கும் பாடம் குறித்து ஆதி முதல் அந்தம் வரை தெரிந்திருந்தாலே அவர்கள் எடுக்கும் வகுப்பிலேயே கற்றுக் கொடுக்கலாம்..
ஆனால் இங்கு நடப்பதோ, இவர்கள் மாணவர்களை படிக்க வைக்கிறார்களே தவிர, கற்று கொள்ள வைப்பதில்லை...
ஒரு மாணவன் கற்று கொண்டால் அவன் அதை மறக்க போவதில்லை,
மாறாக படிக்கும் பொழுது அவன் மறந்து விடுகிறான்...
ஆகவே ஆசிரியர்களே,
நீங்கள் படித்து முன்னேறாததால் வருங்கால மாணவர்களையும் கற்று கொள்ள வைக்காமல் பழி வாங்காதீர்கள்,,
கற்றுக் கொள்ள வையுங்கள்...
வாழுங்கள், வாழ விடுங்கள்...

11.12.10

இரு உலகம்


இந்த உலகம் ஆனது இரண்டு பக்கங்களை உடையது... உலகம் என்று நான் கூறுவது மனிதர்களை..
இந்த மனிதர்கள் இரு வகை படுகிறார்கள்...
ஒன்று மற்றவர்களை சுரண்டி கொழுப்பது...
அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து போராடுவது...
சுரண்டி கொழுப்பது நல்லது என்று பெருவாரியான மக்களின் மனதில் தவறாகவே படுவதில்லை...
எப்படி லஞ்சம் கொடுப்பது என்பது ஒரு தவறான விஷயமாக பல பேருக்கு தெரிவதில்லையோ அது போலவே நாம் எப்படி மற்றவர்களை சுரண்டி கொழுக்கிறோம் என்பதும் தெரிவதில்லை....
போராடும் மனிதர்களும் ஒரு கட்டத்தில் இந்த சுரண்டி கொழுக்கும் கூட்டத்தின் பண்புகளை எடுத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக ஒன்றி விடுகிறார்கள்...
சுரண்டும் கூட்டத்தின் ஒலிபெருக்கியாகவே பெரும்பாலான ஊடகம் உள்ளது என்பது தான் வியப்புக்குரிய உண்மை...
இதில் வேடிக்கை என்ன என்றால் இப்படி சுரண்டி கொழுக்கும் ஊடகங்களின் நடுவே நடக்கும் பனிப்போர் தான்.. சில சமயம் தங்களையும் அறியாமல் உண்மைகளை வெளி விட வேண்டி இருக்கிறது...
இப்படி தான் NDTV யில் வெளியான பர்க்கா தத் அவர்களின் தன்னிலை விளக்கம் குறித்த ஒரு நிகழ்ச்சி அமைந்து விட்டது...
இதை பற்றி விளக்கி கூறும் அளவுக்கு அதில் ரகசியம் இல்லை... மேலும் விவரங்களுக்கு கீழ் காணும் லிங்கை சொடுக்கவும்...

http://www.youtube.com/watch?v=8mH0uae4DFo
http://www.youtube.com/watch?v=EbXQeF85sIc&feature=related
http://www.youtube.com/watch?v=Sp-zIMLROFQ&feature=related
http://www.youtube.com/watch?v=AWqc_3sLzGE&feature=related

6.12.10

மக்கள் கணினி மையம்...


தமிழகத்தில் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் கிராமத்து மக்களுக்கு கணினி பற்றிய ஒரு புரிதலை கொண்டு வருவதற்கும், அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய அவர்களின் உதவிக்கு அரசு சேவைகளை கொண்டு போய் சேர்ப்பதற்கும் ஆரம்பிக்கப்பட்ட சேவை இது என்றால் அது மிகை அல்ல...
ஆனால் இங்கு நடப்பது என்ன?
சஹாஜ் என்னும் நிறுவனத்தை பற்றி மட்டும் வரும் புகார்களை எடுத்து கொண்டாலே இது எப்படி கிராமங்களில் ஆரம்பிக்கப் படும் கணினி மையங்களை சுரண்டி கொழுக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது...
ஒரு irctc ரயில்வே டிக்கெட் பதிவு செய்வதற்கு ஒரு vle கு கிடைக்கும் தொகை ஆனது 5 ரூபாய் மட்டுமே...
இதில் அவர் புக் செய்ய பயன்படுத்தும் கணினியின் மின்சார செலவும், இனைய செலவும், ஒரு டிக்கெட் பிரிண்ட் செலவும் அடங்கும்... ஆக இந்த வருமானத்தில் தான் ஒரு vle ஆகப்பட்டவர் குடும்பம் நடத்துகிறார்...
இதில் எந்த செலவும் இல்லாமலேயே irctc 10 ரூபாய் எடுத்துக் கொள்கிறது என்பது தான் கொடுமையிலும் கொடுமை...
இதில் வருமானம் இல்லை என்றால் கல்வி சேவைகளை கொண்டு போய் சேர்க்கலாமே என்று கூறுகிறார்கள் அந்த நிறுவனத்தின் மேலாளர்கள்...
ஒரு hardware & networking கல்விக்கு அவர்கள் விதித்து உள்ள தொகை 1500 அதில் 750 sahaj கும் 750 vle கும் கிடைக்கும்..
இந்த கல்வி திட்டமானது நாள்களை உள்ளடக்கியது..
ஆக ஒரு நாள் வருமானமானது 8.33 ரூபாய் மட்டுமே...
இந்த வருமானத்தில் தான் அவர் ஒரு மணி நேர இனைய செலவையும், கணினியின் மின்சார செலவையும் பார்த்து கொள்ள வேண்டும்...
ஆக இதில் என்ன வருமானம் வரும் என்று கூட்டி கழித்து பார்த்தால் அது எட்டு சுரைக்காயாகவே உள்ளது என்பது வெளிச்சமாகிறது...
ஆக பணம் போடும் vle கு இவர்கள் போடுவது????????????????????????????????