politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

29.6.10

உலக தொழிலாளர்களே ஒன்று படுங்கள்...


சமீப காலமாக நான் படிக்கும் ஏனைய விஷயங்கள், பொது உடமை சிந்தனைவாதிகள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது... சரி, விஷயத்திற்கு வருவோம்... முதலாளித்துவமும் ஆன்மீகமும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கருத்துக்களை வைத்துக் கொண்டிருந்தாலும் இரண்டும் என்றும் அடித்துக் கொள்வதே இல்லை.. சமரசமாகவே போய்க் கொண்டிருக்கின்றன... அதனால் தான் இன்றும் முதலாளித்துவம் அசைக்க முடியாத ஆணிவேருடன் உள்ளது..
ஆனால் இந்த ஆணிவேரை அசைக்க வேண்டிய பொது உடமை ஆணிவேராக பாய்ந்து செல்லாமல் பல்வேறு திக்குகளுக்கு இலக்கு இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றன...
பொது உடமை வாதிகளே தயவு செய்து ஒன்றை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள், ஒவ்வொரு பொது உடமை கட்சியின் தலைவர்கள் வேண்டும் ஆனால் முதலாளித்துவ வாதிகளாக இருக்கலாம் ஆனால் அந்த தலைவர்களின் போலியான வார்த்தையை நம்பி இருக்கும் பல தொண்டர்கள் உண்மையான ஒரு பொது உடமை வாதிகளாக இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஆகையால், ஒவ்வொரு கட்சியின் உண்மையான தொண்டர்களை துரோகி என்று முத்திரை குத்தாமல் முடிந்த வரை ஒன்று பட்டு போராடுவோம்...
நீங்கள் மார்க்சிச்டாகவோ, லேநிநிச்டாகவோ, பெரியாரிஸ்டாகவோ இன்னும் என்ன என்னவாக இருக்க முடிந்தாலும் இருந்து விட்டு போங்கள் ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் நாளைய உலகத்தின் வாரிசுகள் சமுதாய சமதர்மத்திர்காக நம்மை மட்டுமே நம்பி இருக்கிறார்கள்...
கடற்கரை அலை அடிக்கும் ஓசையில் அருகில் இருப்பவர்களுக்கே பேசுவது காதில் விழாது, அது போல என் பேச்சும் ஆகி விடுமோ என்ற பயம் எனக்கு இல்லை... என்றாவது ஒரு நாள் இந்த பேச்சுகள் உண்மையாய் நேரிடையாக என்னால் பொது மக்களிடம் எடுத்து செல்லப் படும் என்று கண்டிப்பான உறுதியுடன் கூறிக் கொள்கிறேன்.. கடைசியாக அனைவரும் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்...

சே கூறியது போல இந்த உலகில் எங்கு அநீதி நடந்தாலும் அதை கண்டு உன் உள்ளம் கொதித்து எழுந்தால் நீ என் தோழனே...

இந்த சிந்தனையுடன் உலக தொழிலாளர்களே ஒன்று படுவோம், புது உலகை வென்றெடுப்போம்...