politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

19.9.11

தொட்டு விடும் தூரம் தான்

வலைபதிவர்களின் ஆதரவை பெற்ற கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டம் அநேகமாக வெற்றி அடைந்து விட்டது என்றே கருதுகிறேன்.. 


போராட்ட குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்கிய தமிழக அரசு மத்திய அரசுக்கு இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கடிதம் அனுப்புவதோடு மட்டுமல்லாமல் அமைச்சர் குழுவையும் பிரதமரை சந்திக்க அனுப்பவதாகவும் உறுதி கூறியுள்ளது.. 


பல்வேறு தரப்பினரும் போராடிய இந்த போராட்டம் அனைவரின் நெஞ்சுருதியின் காரணமாக அநேகமாக வெற்றி கோட்டை நெருங்கி விட்டது என்றே கருதுகிறேன்... 

அங்கே போராட்டத்தில் நேரடியாக உண்ணாவிரதம் இருந்து வரும் கூடல் பாலாவை அலை பேசியில் [9940771407] அழைத்து பேசிய பொழுது, தற்பொழுது மேதா பட்கரும் போராட்ட மேடையில் ஆதரவு தெரிவித்து கருத்துக்கள் தெரிவித்துக் கொண்டிருப்பதாக கூறினார்.. மேலும் போராட்ட பாதையை எப்படி கொண்டு செல்வது என்று போராட்ட குழு இன்று மாலை கூடி முடிவெடுக்கும் என்று அறிவித்தார்... 

இணைந்த கரங்களுடன் போராடினால் நடக்காது என்பது எதுவும் இல்லை என்பதை இந்த செய்தி நமக்கு சுட்டுகிறது... போராட்டத்தில் இணைத்துக் கொண்ட அனைவருக்கும், உள்ளுக்குள் வருத்தப் பட்ட அனைவருக்கும் உரக்க சொல்வோம் இன்குலாப் ஜிந்தாபாத்