politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

15.8.10

august 15 1947


சுதந்திர தின நல்வாழ்த்துக்கள், என்னிடம் இப்படி நேற்று ஒருவர் கூறிய பொழுது எனக்கு எப்படி பதில் வாழ்த்துக்கள் சொல்வது என்று புரியாமல்... என்ன புடலங்காய் சுதந்திரம்... ஒருத்தர் கிட்ட இருந்து அடிச்சு புடிச்சு வாங்கி அதை நம்ம நாட்டுக்காரன் கிட்ட அடகு வச்சிட்டு, சோத்துக்கு லாட்டரி அடிச்சுக்கிட்டு இருக்கோம்... கொஞ்சம் அதிகமா பணம் வச்சிருக்கிறவன் ஒன்னு அதை குடிச்சு மூத்திரமா விட்டுகிட்டிருக்கான், இல்லைனா படுக்கையில விட்டுகிட்டு இருக்கான், இல்லேன்னா சினிமா தியேட்டர்ல பெருமூச்சாய் விட்டு கிட்டு இருக்கான்... எப்படியோ இதை எல்லாம் பண்ண முடியாதவன் ஒரு 5 ரூபாயோ பத்து ரூபாயோ கோயில் உண்டியல்ல போட்டு பூஜாரியோட தொப்பைய வளத்துகிட்டு இருக்கான்... என்ன புடலங்காய் சுதந்திரம்... என்னிக்கு இந்த நாட்டில எல்லாரும் மூணு வேலை சோறு(சாம்பார், கூட்டு போரியல் அப்பளத்தோட) சாப்பிடரமோ அன்னிக்கு தான் உண்மையான சுதந்திர தினம்.. அந்த நாளை எதிர்பார்த்து இன்றே சொல்கிறேன் இன்குலாப் ஜிந்தாபாத்... ஜெய் ஹிந்த்...

3.8.10

இலக்கு அறியா கீற்று...


கீற்றுவில் எழுதும் அனைவரும் ஒரு விதமான மிதவாதிகளாகவே உள்ளதாக தெரிகிறது... உண்மை அறிந்தவர்கள் ஒரு பக்கம், உண்மையை புரிந்து கொல்லாமல அதை தேடிக் கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம், உண்மையை மறைத்து பொய்யை மட்டுமே உண்மையை உரைப்பவர்கள் ஒரு பக்கம்.... ஆகா இந்த பட்டியலில் நடுவில் இருப்பவர்கள் அறிந்தவர்கள் பக்கமோ அல்லது உரைப்பவர்கள் பக்கமோ சேர்ந்துவிடுகிறார்கள்... சேர்வதும் மட்டும் அல்லாமல் அதை கண்மூடித்தனமாக நம்பவும் செய்கிறார்கள்... அனால் அப்படி பட்டவர்களுக்கு வெளிச்சத்தை காட்ட வேண்டிய அறிந்தவர்கள், இவர்களையும் சேர்த்து தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்... ஜெயந்திரர் கைது செய்யப் பட்ட அன்று, அந்த கைதை எதிர்த்து அழைக்கப்பட்ட தர்ணா போராட்டத்திற்கு மொத்த காஞ்சிபுரத்திலும் கூடியது வெறும் நான்கே பேர்கள் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.. ஆக ஜெயந்திரர் பிராமணராக இருந்தாலும் அனைத்து பிராமணர்களும் இவர் பின்னால் சென்று விடவில்லை, அனைத்து பிராமணர்களும் கெட்டவர்கள் அல்ல, அனைத்து தி மு க தொண்டர்களும் அயோக்கியர்கள் அல்ல, அனைத்து தி க தொண்டர்களும் பகுத்தறிவாளிகள் அல்ல, அனைத்து அ தி மு க தொண்டர்களும் ஜேவின் விசுவாசிகள் அல்ல.. இப்படி அனைத்து விஷயங்களையும் கண்மூடித் தனமாக எதிர்க்காமல் தயவு செய்து உளவியல் ரீதியாக பிரசினைகளை எழுத்தாளர்கள் எடுத்துக் கொண்டால் நாம் சீக்கிரமே மக்கள் ஜனநாயகத்தை சென்று அடைவோம் என்பது மட்டுமே நிஜமாக உள்ளது...