
1997 லிருந்து இன்று வரை பொருளாதார அறிவுரை கமிட்டியில் இருப்பதால், இந்தியாவில் இருக்கும் அனைத்து மக்களும் பணக்காரர்கள் ஆகி விட்டார்கள் என்ற கனவு போலும்...
தூக்கத்தில் இருந்து அவரை யாராவது எழுப்பினால் நன்றாக இருக்கும்...
காஸ் சிலின்டர் பயன்படுத்துவது பெரும்பாலும் பணக்காரர்களே என்று திருவாய் மலர்ந்து அறுளி உள்ளார்...
ஆனால் இவர் மறந்து விட்டது என்னவோ ஒன்றே ஒன்று தான், விமானத்தில் பறப்பவர்களை பற்றி, இல்லை என்றால் ஆகாயத்தில் பறப்பவர்கள் அனைவரையும் இவர் ஏழையாக கருதுகிறாரோ என்னவோ, அதுவும் நமக்கு தெரியவில்லை..
விமானத்திற்கான பெட்ரோல் விலை ஏற்றத்தை பற்றி மட்டும் என் எந்த கர்மம் புடிச்சவனும் பேச மாட்டேன்கிறார்கள் என்பது தான் என் புத்தியை உதைத்து கொண்டே இருக்கிறது...
http://www.moneycontrol.com/news/business/sporadic-price-hikepetrol-likely-kirit-parekh_541854.html
ஒரு கிலோ லிட்டர் ஜெட் பெட்ரோல் விலை சென்னையில் 65201 ரூபாய். அதாவது ஒரு லிட்டருக்கு 65.201 ரூபாய் மட்டுமே...
போனால் போகட்டும் ஆகாயத்தில் பறப்பவர்கள் ஏழைகள் தானே...
http://www.iocl.com/Products/AviationTurbineFuel.aspx