politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

10.2.12

இணையும் கரங்களின் சத்தம்

 அது என்னவோ சூனிய விகடனார் வந்தால் ஏதாவது பதிவு போட வைத்து விடுகிறார்...

கூடங்குளம் போராட்டம் என்பது ஒரு பெரிய வரலாறு...

இந்த போராட்டம் தொடங்கிய கால கட்டமான 80  களில் ஆரம்பித்து எண்ணற்றவர்கள் இந்த போராட்டத்தில் ஐக்கியப் படுத்திக் கொண்டு செயலாற்றிக் கொண்டு வருகிறார்கள்...

ஒரு தனி நபரை சார்ந்து இந்த போராட்டம் இல்லை, அது அந்த பகுதி மக்களின் எண்ணத்தில் ஆழ்ந்து ஊறி விட்டது...

எத்தனையோ கைகள் அந்த போராட்டத்தை தட்டிக் கொடுத்தபடி சத்தத்தை அதிகரித்தப் படி உள்ளனர்...

இந்த போராட்டம் வெற்றி பெறுமா? பெறாதா என்ற கேள்விக்கு எல்லாம் உள்ளே செல்லாமல்...

இந்த புரட்சி தீ என்றென்றும் போராடும் அனைத்து உள்ளத்திலும் கனன்று கொண்டிருக்கும் என்று மட்டுமே கூற முடியும்...

frontline  ஆங்கில இதழில் வெளியான, புகுஷிமா அணு உலை விபத்தை நேரில் சென்று ஆய்வு செய்து, இன்று அதன் நிலைமை என்ன என்று கூறும் கட்டுரையை படிக்க கீழ் உள்ள சுட்டியை சொடுக்கவும்..


இந்த போராட்டம் என்பது அறிவியலை எதிர்ப்பதால் பிற்போக்கு தனமானது என்று கூறும் உள்ளங்களுக்கு, பகத் சிங்கின் கட்டுரைகளை படியுங்கள் என்று மட்டும் கூறிக் கொள்கிறேன்...
இன்குலாப் ஜிந்தாபாத்

2.2.12

நம்பிக்கை

இறைவன் என்ற பிம்பத்தின் மீது நம்பிக்கை வைத்து, தன்னையே நம்ப மறுக்கும் ஒரு குழு... 

தன் மீது நம்பிக்கை வைத்து இறைவன் என்ற பிம்பத்தை நம்ப மறுக்கும் ஒரு குழு..

இங்கு கேள்வி எல்லாம் நம்பிக்கை மீது மட்டுமே...

ஒருவன் கடவுள் இருக்கிறான் என்று நம்பி, அதை குறித்து மைக் செட் எல்லாம் வைத்து பிரச்சாரம் செய்தால் கடவுளை  மறுப்புவர்கள் எதிர்வாதம் மட்டுமே புரிகிறார்கள்...

அதையே ஒருவன் கடவுள் என்ற பிம்பம் இல்லை என்று பிரச்சாரம் செய்தால் கடவுள் என்ற பிம்பத்தின் மீது நம்பிக்கை உள்ளவனோ, கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் கடவுளை காப்பாற்ற அடி தடியில் களம் இறங்குகிறான்...

மதம் பிடித்த மனிதனுக்கு கருத்து சுதந்திரம் பிடிப்பது இல்லை... ஆனால் கருத்து சுதந்திரத்தை முழு மனதாக கைக்குள் வைத்திருக்கும் வலை உலகில் பதிவாக எழுதும் நம் தோழர்களை அடி தடியில் ஒடுக்கி விட முடியாது...

எங்கள் நம்பிக்கையை கேள்வி குறியாக்கி எங்கள் மனதை புண்படுத்தாதீர்கள் என்று கடவுள் என்ற பிம்பத்தை நம்புபவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்...

கடவுள் என்ற பிம்பம் இல்லை என்ற எங்கள் நம்பிக்கையை நீங்கள் கேள்வி குறியாக்கும் பொழுது நாங்கள் எங்கு சென்று முறை இடுவது?

அடிபட்ட நமது தோழரின் வலைபூ..