politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

14.12.10

வா வாத்தியாரே...


நேற்று deccan chronicle செய்தி தாளில் ஒரு செய்தியை பார்த்தேன்.. RTE சட்டம் அமுலுக்கு வந்தால் தனியாக TUITION எடுப்பது தடை செய்ய படும் என்றும், இதனால் மாணவர்கள் பாதிக்கபடுவார்கள் என்றும் பெரிதும் கவலை பட்டிருந்தனர்.. அதில் ஒரு ஆசிரியர் பட்ட கவலை தான் என்னை இந்த தலைப்பில் எழுத வைத்துள்ளது..
அவரது வகுப்பில் 40 மாணவர்கள் உள்ளனராம், ஆகையால் தனி தனியாக கவனம் செலுத்த முடிவதில்லையாம், ஒரு வகுப்பில் செய்ய முடியாததை அவர் பள்ளி முடிந்ததும் இன்னோரு வகுப்பு எடுத்து சரி செய்து விடுகிறாராம், இப்படி கூறிய இவர் தன்னை அறியாமல் ஒரு உண்மையையும் உடைத்து விட்டார், பள்ளியில் வாங்கும் சம்பளம் போதவில்லை என்றும் இப்படி தனியாக வகுப்பு எடுப்பதில் தான் இவர் குடும்பம் நடத்துகிறார் என்றும் பட்டவர்த்தனமாக கூறி உள்ளார்...
முதலில் ஆசிரியர்கள், தங்களது அறிவு திறனை பெருக்கி கொள்ள வேண்டும்...
இன்னும் பல தமிழ் ஆசிரியர்களுக்கு தமிழ் எங்கள் தெரிவதில்லை..
அது அவர்கள் தவறில்லை..
நம் சமூகம் அப்படி..
இன்னும் பகத் சிங்கை தீவிரவாதி என்று எண்ணிக் கொண்டிருக்கும் எத்தனையோ ஆசிரியர்கள் உள்ளனர்...
ஆகையால் ஆசிரியர்கள் அவர்கள் எடுக்கும் பாடம் குறித்து ஆதி முதல் அந்தம் வரை தெரிந்திருந்தாலே அவர்கள் எடுக்கும் வகுப்பிலேயே கற்றுக் கொடுக்கலாம்..
ஆனால் இங்கு நடப்பதோ, இவர்கள் மாணவர்களை படிக்க வைக்கிறார்களே தவிர, கற்று கொள்ள வைப்பதில்லை...
ஒரு மாணவன் கற்று கொண்டால் அவன் அதை மறக்க போவதில்லை,
மாறாக படிக்கும் பொழுது அவன் மறந்து விடுகிறான்...
ஆகவே ஆசிரியர்களே,
நீங்கள் படித்து முன்னேறாததால் வருங்கால மாணவர்களையும் கற்று கொள்ள வைக்காமல் பழி வாங்காதீர்கள்,,
கற்றுக் கொள்ள வையுங்கள்...
வாழுங்கள், வாழ விடுங்கள்...