politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

12.12.11

அடுத்து கல்பாக்கம்

கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து விசாரிக்க காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் சென்றதாகவும், கதிர்வீச்சு குறித்த கேள்விக்கு அணு ஆற்றல் கட்டுப்பாட்டு குழு நிர்ணயித்த அளவை விட அதிகமாக கதிர்வீச்சு வெளியாகவில்லை என்று அதிகாரிகள் அவரிடம் கூறி உள்ளனர் ...
இதற்க்கு நேரடியாக ஆமாம் கதிர்வீச்சு வெளியாகிறது என்று உண்மையை ஒத்துக் கொண்டிருக்கலாம்..
http://ibnlive.in.com/generalnewsfeed/news/mp-visits-kalpakkam-nuclear-plant/924258.html

இன்று,
வலை பதிவுகளில் சூறாவளி என்ற பெயரில் இயங்கும் அமைப்பு, கூடங்குளம் போராட்ட குழுவின் தலைவரான திரு.உதய குமார் அவர்களின் பேட்டியை வெளியிட்டு உள்ளனர். அந்த பேட்டியில் கல்பாக்கம் மீனவர்கள், கல்பாக்கம் பகுதியில் மீன்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாகவும், வழக்கமாக கிடைக்கும் மீனும் நோய் வாய்ப் பட்டே இருப்பதாகவும் கூறுவதாக தகவல் அளித்துள்ளார்

அந்த பேட்டியின் ஒலி வடிவத்தை, எழுத்து வடிவில் மாற்றி நம் பார்வைக்கு வைத்து உள்ளனர்..

http://suraavali.blogspot.com/2011/12/blog-post_11.html

எனக்கு ஒலி வடிவத்தை பதிவுகளில் இணைக்கும் தொழில் நுட்பம் தெரியாததால், அந்த ஒலியை, ஒலி ஒளி வடிவாக மாற்றி யூட்யூப் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளேன்...



நேற்று என் முந்தய பதிவில்,  சூனிய விகடன்என்பவர்  நம் நண்பர் கூடல் பாலா குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். நான் கடைசியாக கூடல் பாலாவிடம் பேசிய பொழுது, உண்ணாவிரதம் இருந்த காரணத்தால் அவர் உடல் நிலை மோசமாகி போனதாகவும், மருத்துவர்கள் பேசுவதை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறி இருந்தார். ஆகையால் அவரிடம் நான் பேச முயற்ச்சிக்கவில்லை. ஒரு வாரம் முன்பு வைரை  சதீஷ் இடம் கேட்ட பொழுது, அவரும் தகவல் கிடைத்தால் தெரிவிக்கிறேன் என்று கூறினார்... மக்களுக்காக போராடிய மாவீரன் நம் தோழன் கூடல் பாலா. வலை பதிவுகளின் வரலாற்றில் அவன் பெயர் நீங்கா இடம் பிடித்திருக்கும்.