politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

24.3.11

முதலை கண்ணீர்


சிறு வயதாக இருக்கும் பொழுதே முதலை கண்ணீர் பற்றிய கதைகளை படித்து விட்டதால் கீழ் கண்ட இணைப்பில் உள்ள செய்தியை படிக்கும் பொழுது சிரிக்காமல் இருக்க முடியவில்லை..
நமது கையில் இருந்து நூறு ருபாய் கொள்ளை அடித்து நமக்கே பத்து ரூபாயை திருப்பி தரும் திட்டத்தால் கிராம மக்கள் வேலைக்கு போக சோம்பல் படுகிறார்கள் என்று புலம்பி இருக்கிறார்கள் பல்வேறு நிபுணர்கள்...
இத்தனை நாளாய் செய்த வேலைக்கு கூலியை கொடுக்காமல், வேலையே நிரந்தர படுத்தாமல் கூலி ஆட்களாகவே இவர்களை கருவேப்பிலை போல் பயன்படுத்திக் கொண்ட அனைத்து பணக்காரர்களையும் இவர்கள் ஏனோ குஷி படுத்த விரும்பி உள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது...
இவர்கள் சொல்வது போல் தமிழகம் இருந்தால் எந்த வேலையுமே நடக்காது, எங்கோ யாரோ செய்த பிழையால் நடந்த விஷயத்தில் தலையையும் வாலையும் விட்டு விட்டு முண்டத்தை பிடித்துக் கொண்டு தொங்கி கொண்டிருக்கிறார்கள்...
இன்னும் எத்தனை நாளைக்கு தான் இவர்கள் பொய்யுரை உரைக்க முடியும், என்றாவது ஒரு நாள் இவர்கள், எழுச்சி பெறப் போகும் புரட்சிக்கு பதில் சொல்லி தான் ஆக வேண்டும்...


http://businesstoday.intoday.in/bt/story/assembly-polls-dmk-government-unrestrained-populism/1/13896.html