politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

28.3.11

குழப்பத்தில் தமிழ் நாடா? நானா?


தி மு க வும் அ இ அ தி மு க வும் போட்டி போட்டுக் கொண்டு அறிவித்துள்ள லேப்டாப் இலவச அறிவிப்பால் தலை சுற்றி போயுள்ளேன்...
நேற்று தற்செயலாக செய்திகளை பார்த்த பொழுது, தமிழ் நாட்டின் ஒரு வருட வருமானம், மத்திய அரசாங்கம் தந்ததையும் சேர்த்து 79413 கோடி ருபாய் என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது தமிழக அரசு...
ஜெயலலிதா அம்மையார் அறிவித்துள்ளது போல் அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் குடுப்பது என்றால் தோராயமாக ஒரு லேப்டாப் 5000 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் கிட்ட தட்ட 1,00,000 கோடி ருபாய் செலவாகிறது,,,
சரி,
இதை நான் நான்கு ஆண்டுகள் காலத்தில் செய்வதாக எடுத்துக் கொண்டாலும் இந்த திட்டம் 2011 ஆம் ஆண்டில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தானா என்று சந்தேகம் தலை தூக்குகிறது...
இல்லை எல்லோருக்கும் தான் என்றால் லேப்டாப் புக்கு மட்டும் தான் இந்த அரசாங்கம் செலவு செய்ய போகிறதா என்ற எண்ணம் எழுகிறது..
ஆக அரசாள்பவர்களிடம் உறுதியான எந்த முன்னேற்றத்திற்கு உதவும் திட்டமும் இல்லை என்பது புலனாகிறது...
இதை எல்லாம் கேள்வி கேட்காமல் தி.மு.க ஜெயிக்குமா அ.தி.மு.க ஜெயிக்குமா என்று நம் நாட்டு மன்னர்கள் உள்ளே வெளியே விளையாடி கொண்டிருக்கிறார்கள்,,
இதை புரிந்து கொண்டவர்கள் இதற்க்கு மேல் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி நிற்கிறார்கள்...
மன்னர்களே, குழப்பம் வேண்டாம் 49 ஓ எதற்கு இருக்கிறது?
உங்கள் வோட்டு 49 ஓ விற்கே...