politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

29.4.11

உள்ளே வெளியே..


பங்கு வணிகம்னா என்னன்னு யாருக்கு தெரியும்?
எல்லோரும் பொதுவா அது ஒரு வியாபாரம்,
பணம் செய்ய சுலபமான வழி...
என்று ஏதேதோ காரணம் சொல்லலாம்...

ஆனால் எத்தனை பேருக்கு அது சூதாட்டம் என்பது தெரியும்...

கரிக்ட் நைனா நான்கூட மங்காத்தா ஆட சொல்ல இப்படி தான் எத்தி வுட்டுக்கினே இருப்போம்..
அட்சா ப்ரைஸ் இல்லாங்காட்டி
அத்தை விடு அதை ஏன் என் வாயாலே சொல்லிக்கினு...

இப்படி தான் நம்ம பக்கிரி அண்ணன் இந்த பங்கு வணிகம் பத்தி நல்ல படியா என் புத்திக்கு எட்டும்படி எடுத்து உரைத்தார்...
இதில் நகைச்சுவை என்னனா இது சட்டத்தோட அனுமதியோட நடக்கும் ஒரு சூதாட்டம்...

பணம் சம்பாதிக்க சிறந்த வழி
வேற ஒண்ணுமே இல்ல

ஆனா நிம்மதியா இருக்கணும்னா ஒரு வழி இருக்கு
அது தான் உழைப்பு...

மே தின வாழ்த்துக்கள்....