politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

7.12.11

கமாடிடி சந்தை...

நேரடி வர்த்தகம் [spot trade] மற்றும் முன்பேர வர்த்தகம்.. [futures]

நாம் அன்றாடம் வாங்கும் பொருட்களில் எப்படி எல்லாம் விலை நிர்ணயம் செய்கிறார்கள் என்று ஒரு பார்வை. கட்டுரையாக கொடுத்தால் படிக்க சிரமமாக இருக்கும் என்று கேள்வி பதில் மூலம் இங்கு விளக்குகிறேன்...

ஆணிவேர்: நேரடி வர்த்தகம் என்றால் என்ன?

நண்பர்: இணையத்தில் இன்று விற்கும் பொருளை இன்று என்ன விலை என்று பார்த்து இணையத்தில் ஆர்டர் செய்து வீட்டுக்கே டெலிவரி செய்யும் முறை தான் நேரடி வர்த்தகம்.

ஆணிவேர்: முன்பேர வர்த்தகம் என்றால் என்ன?

நண்பர்: ஒரு பொருளை வாங்கிக் கொள்ள, குறிப்பிட்டுள்ள ஊகத்தின் அடிப்படையிலான விலையில் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளப் போடப் படும் ஒப்பந்தமே முன்பேர வர்த்தகம் ஆகும்.

அதாவது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 1/1/2012 தேதியில் $.5500/= விலைக்கு வாங்கிக் கொள்கிறேன் என்று யூகத்தின் அடிப்படையில் ஒப்பந்தம் செய்துக் கொள்வது..

ஆணிவேர்: அந்த நாளில் குறிப்பிடப் பட்டுள்ள விலையை விட அதிகம் இருந்தால்?

நண்பர்: அது லாபம்.

ஆணிவேர்: ஒரு வேளை அது குறிப்பிடப் பட்டுள்ள விலையை விட குறைவாக இருந்தால்?

நண்பர்: அது நஷ்டம் என்று எடுத்துக் கொண்டாலும்.. அந்த ஒப்பந்தம் நஷ்டம் அடையாமல் பார்த்துக் கொள்ள ஹெட்ஜிங் என்ற ஒரு வகையை நாங்கள் கை ஆள்வோம்...

ஆணிவேர்: அது என்ன ஹெட்ஜிங்?

நண்பர்: அதாவது இன்னொரு ஒப்பந்தத்தில் வாங்கி, எந்த அளவுக்கு நஷ்டம் அடைந்ததோ அந்தளவு விலை ஏறிய உடன் விற்று விடுவோம்..

ஆணிவேர்: ஒரு நாளைக்கு தடாலடியாக விலை ஏறுமா?

நண்பர்: பங்கு சந்தை போல் இங்கு தடாலடியாக விலை ஏறாது.. ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று சதவிகிதம் விலை ஏற அனுமதிக்கப் படுகிறது.. அந்த குறிப்பிட்ட அளவு வந்தவுடன் விலை ஏற்றம் தடை செய்யப் படும்.

ஆணிவேர்: அப்படி என்றால் பத்து நாளைக்கு முப்பது சதவிகிதம் விலை ஏற முடியும். அப்படி தானே?

நண்பர்: ஏறக் குறைய அப்படி தான்.. ஆனால் முழுமையாக அப்படி நடக்க வாய்ப்பில்லை..

ஆணிவேர்: அப்படி என்றால் ஊக வணிகத்தால் விலை ஏறுகிறது என்று எதை வைத்து போராடுகிறார்கள்?

நண்பர்: ஊக வணிகத்தில் விலை நம் நாட்டு நிலவரம் வைத்து விலை நிர்ணயிக்கப் படுவதில்லை.. சர்வதேச சந்தையின் நிலைமையை வைத்தே உள்நாட்டு பொருட்களின் விலை நிர்ணயிக்கப் படுகிறது.

ஆணிவேர்: தற்காலிக தட்டுப் பாடை உருவாக்கி இங்கு பொருட்களின் விலையை ஏற்ற முடியுமா?

நண்பர்: நான் ஏற்கனவே கூறியது போல் தடாலடியாக உயர்த்த வாய்ப்பில்லை... கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்த முடியும். ஆனால் கட்டுப்பாடுகளும் அதிகம். அரிசி வகையாறாக்களில் பாசுமதி அரிசி மட்டுமே இந்த சந்தையில் கிடைக்கும்.. சாதாரண அரிசி கிடைக்காது... அது போல் கட்டுப்பாடுகள் அதிகம்...

ஆணிவேர்: இந்த வணிக முறையில் யார் யார் ஈடுபடலாம்?

நண்பர்: இந்திய நிரந்தர வருமான வரி கணக்கை வைத்து உள்ள யாரும் ஈடுபடலாம். நீங்கள் அடுத்து என்ன கேட்பீர்கள் என்று தெரியும். வெளிநாட்டினரும் ஈடுபடலாம், பாஸ்போர்ட் வைத்து கொண்டு.

ஆக
முட்டை என்பது சைவம் என்றாகிவிட்டது,
பீர் என்பது குளிர்பானம் என்றாகிவிட்டது..
பந்தயம் கட்டி விளையாடும் ரம்மி சூதாட்டம் இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறி விட்டது..
அதே போல் பங்கு சந்தையும் சூதாட்டம் அல்ல என்று காலம் காலமாய் சொல்லி வருவதை, இல்லை என்றே ஆளும் வர்க்கம் சொல்லி வருகிறது.


இதை முழுவதும் புரிந்து கொள்ள நான் இதே துறையில் ஒரு வருடம் இருந்தால் மட்டுமே முடியும் என்று என் நண்பன் கூறி விட்டான்.. ஆகையால் எனக்கு புரிந்த அளவுக்கு நான் இங்கு விளக்கி இருக்கிறேன்..