politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

21.9.11

தற்காலிக வெற்றி


உள்ளாட்சி தேர்தலை மனதில் கொண்டு தென் தமிழக மக்களின் கோபத்துக்கு ஆளாகாமல் தப்பிக்க பிடிவாதத்தின் மறு பெயரான தமிழக அரசு போராட்ட குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்கியதை அடுத்து உண்ணாவிரதம் முடிவுக்கு வந்ததாக போராட்ட குழுவின் பேச்சு வார்த்தை குழுவினர் கூறியுள்ளனர்.. 

பல்வேறு செய்திகள் தென் தமிழகத்தில் நடக்கும் போராட்டத்தை பின்னுக்கு தள்ளினாலும், ஓங்கி ஒலித்த போராட்ட குரலால் அனைத்து செய்திகளும் பின்னுக்கு சென்றுள்ளதை இந்த போராட்டம் நினைவூட்டுகிறது..

உண்ணாவிரதம் இருந்து வரும் தோழர்கள் போராட்ட குழுவினரின் முடிவுக்கு இணங்கி இன்றைக்குள் தங்கள் உண்ணாவிரதத்தை முடித்து கொள்வார்கள் என்று தெரிகிறது... கூடல் பாலாவிடம் பேசிய பொழுது, நல்ல தகவல் வந்திருப்பதாகவும், உண்ணாவிரதம் வாபஸ் ஆகுமா என்ற தகவலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறினார்..

ஏழு கிலோ உடல் எடை குறைந்ததே தவிர வேறு எதுவும் குறையில்லை என்றார்... உடல் எடை குறைந்தது கவலை அளித்தாலும் உள்ளத்தின் எழுச்சி குறையவில்லை என்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது... போராடிய அத்தனை உள்ளங்களுக்கும் நான் கூறி கொள்வது இன்குலாப் ஜிந்தாபாத்..