politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

1.11.11

மக்கள் போராட்டம் வெல்லும்...

கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு, ஆதரவு கரம் நீண்டு கொண்டே இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

வழக்கமாய் தமிழக தமிழனுக்காக போராடாத சீமான் அவர்களும், உணர்ச்சி பிழம்பான வை.கோ அவர்களும் இந்த போராட்டத்தில் இணைத்து கொண்டுள்ளார்கள்...

தூக்கு தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கும் மூவரை காப்பாற்றும் முயற்சியில் உள்ளவர்கள், இந்த போராட்டத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் கூடங்குளம் மக்களின் மன நிலையை படம் பிடித்து காட்டும் செயலாக உள்ளது.. 

இந்த போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூசாமல் இது வரை மக்கள் ஒன்று பட்டு போராடிக் கொண்டிருப்பதே இதற்கு சாட்சி..

எத்தனையோ போராட்டங்களை இந்த நாடு கண்டுள்ளது...

இது இடது சாரிகளின் போராட்டம்..

இது வலது சாரிகளின் போராட்டம்...

இது தீவிரவாதிகளின் போராட்டம்..

என்று எத்தனையோ போராட்டங்கள் நீர்த்து போயிருக்கிறது...

மக்களின் போராட்டம் என்று சுதந்திர போராட்டத்திற்கு பிறகு, இந்த போராட்டத்தையும், மணிப்பூர் இரோம் ஷர்மிளா போராட்டத்தையும் கூறியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பாதிக்கப் பட்டவர்களின் போராட்டத்தில் பாதிக்கப் பட்டவர்களின் பங்களிப்பு உணர்ச்சி பூர்வமானது.. ஆனால் இங்கு யார் பாதிக்கப் படுவோம் என்று தெரியாமல், யாருமே பாதிக்காமல் இருக்கலாமே என்று போராடுவது இந்த போராட்டத்தை தனித்து காட்டுகிறது...

இந்த மக்களின் வெற்றியில் தான் நம் நாட்டின் அணு உலை திட்டத்திற்கு ஆப்பு அடிக்கும் அதிகாரம் இருக்கிறது...