
விக்கி லீக்ஸ், கடந்த ஒரு மாதமாக ஊடகங்களுக்கு தீனி போட்டு கொண்டிருக்கும் ஒரு அமைப்பு..
அமெரிக்காவின் ரகசியங்களே இப்படி நாறுகிறதே...
நம்ம நாட்டு ரகசியங்கள்....?
இப்படி தான் பலர் மனக் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்...
எல்லா நாட்டு அரசாங்கங்களும் பீதியில் இருக்க நம்ம நாட்டு ஆட்சியாளர்கள் மட்டும் தப்பு தாளங்கள் ரஜினி போல் இதுக்கு போய் அலட்டிக்கலாமா என்று விசில் ஊதி திரிந்து கொண்டிருக்கிறார்கள்...
இவர்கள் இப்படி இருக்க காரணம்..
1. நம்ம நாட்டு மக்களக்கு மறதி ஜாஸ்த்தி..
2. ஒரு ஓட்டுக்கு 500 ருபாய் சேர்த்து கொடுத்தால் மன்னித்து விடுவார்கள்...
3. நம்ம நாட்டுல டாகுமென்ட் எங்கப்பா இருக்கு.. எடுக்க?
ஆதர்ஷ் ஊழலில் முக்கியமான ஆவணங்களை காணவில்லை என்று சிபிஐ முடியை பிய்த்து கொண்டு திரிகிறார்கள்..
பல ஆண்டுகள் நிலப் பதிவு ஆவணங்கள் தரமில்லாத cd யில் பதிவு செய்ததால் இப்பொழுது கர்நாடக அரசாங்கம் முழி பிதுங்கி திரிகிறார்கள்..
அடிக்கடி எரிந்து போகும் கோப்புகள்..
central server இல்லாத அரசாங்கம்
என்று ரகசியங்கள் வெளியே போகாமல் காப்பாற்ற எங்களுக்கு தெரியும் என்று மார் தட்டி கொள்கிறார்கள் 1947 லிருந்து ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள்..
அட
இதுக்கு போய் அலட்டிக்கலாமா?