சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் போலி மருத்துவர்களை ஒழிக்க ஒரு துரும்பையும் எடுத்து போடவில்லை...
போலி மருந்துகளின் புழக்கத்தை கட்டுபடுத்த எந்த முயற்சியும் செய்ததில்லை...
இப்படி எவ்வளவோ அடுக்கி கொண்டே போகலாம்,
ஆனால் மிகவும் கவனமாக பரிந்துரைக்கப் பட வேண்டிய நுண்ணுயிர் கொல்லி [அண்டிபயோடிக்] மருந்துகளை கை ஆளுவதில் விதி முறைகள் வகுக்கப் படும் பொழுது எதற்கு இந்த மருந்து கடைக்கார்கள் பொங்க வேண்டும் என்று தான் தெரியவில்லை...

இதை தடுக்க புறப்பட்ட இந்த சட்ட முன்வடிவை எதிர்த்து நாளை கடைகள் அடைத்து போராட போகிறார்களாம் டெல்லியில்..
அண்ணா ஹஜாறேவுக்கு அனுமதி மறுக்கும் காவல்துறை, இது போன்ற போராட்டத்திற்கு எல்லாம் அனுமதி கொடுப்பதை மறுப்பதில்லை...
மேலும் முறையாக படித்த மருத்துவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து நோயாளிகளுக்கும் மருந்து சீட்டின் நகலையும் இணைத்து கொடுத்தால் மருந்து கடைக்காரர்கள் நகலெடுக்க ஓட வேண்டியதாக இருக்காது..
வேலை வாய்ப்பை உருவாக்கும் இது போன்ற சட்ட முன்வடிவுகள் முடிந்த வரை பலரின் ஒத்துழைப்பையும் நல்கி அமுல்படுத்தினால் அனைவருக்கும் ஆனந்தமே...

அதற்கு முதலில் மருந்து துறையை, ரசாயனம் மற்றும் உரத்தொழிற்சாலை அமைச்சகத்தில் இருந்து மாற்றி அதை சுகாதார துறையில் இணைக்க வேண்டும்...
அரசிடம் நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்...
சீரியசா அணுக வேண்டிய சமாச்சாரம் சார், வழக்கம் போல சின்ன புள்ள தனமா அணுகிடாதீங்க...