politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

15.10.11

உண்மையா பொய்யா.. [உண்மையே]

நேற்று இரவு DNA  என்னும் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் உண்ணாவிரதம் இருந்த ஆறு மாற்று திறநாளிகள் காவலர்களால் தாக்கப் பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது...

இந்த செய்தி உண்மையா பொய்யா என்று பிற செய்தி தளங்களை ஆராய்ந்தாலும், எங்கும் குறிப்பிட படவில்லை...
எது எப்படியோ அடக்குமுறை எந்த போராட்டத்தையும் அடக்கி விட முடியாது என்று இங்கு நாம் மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்...

போராடும் உள்ளங்களுக்கு ஆதரவு பெருகும் வேலையில் உரக்கச் சொல்கிறேன் இன்குலாப் ஜிந்தாபாத் 

 செய்தியை படிக்க சுட்டி

பிற்சேர்க்கை: சமீபத்தில் கூடல் பாலா அவர்கள் அளித்த தகவல்படி இருபது மாற்று திறனாளிகள் அணு மின் நிலைய வாசலில் தர்ணா இருந்த பொழுது அவர்களை தாக்கியதால் ஒருவர் மண்டை உடைபட்டு கஸ்தூரி மருத்துவமனையில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றது.. இந்த செய்திகளை இது வரை வெளியிடாத அனைத்து ஊடகங்களையும் கண்டிக்கும் அதே சமயம் உண்மையான செய்திகளை தாங்கி வருவது வலைபூ ஊடகங்களே என்று மீண்டும் முழக்கமிடுகிறேன் இன்குலாப் ஜிந்தாபாத்