politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

30.6.11

கண்ணுக்கு தெரியாத ஆப்பு...

ஊழலை எதிர்த்து சட்டம் கொண்டு வர வேண்டும் ஒரு சிலர் போராடி வருகிறார்கள்....
அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...
சட்டத் துறையும் அரசின் கை வசமே இருக்கும் போது இதை சட்டம் போட்டு எல்லாம் தடுக்க முடியாது என்பது விவரம் புரிந்தவர்களுக்கு தெரியும்...

ஆதர்ஷ் வீட்டு திட்டத்தில் பல முக்கியமான ஆவணங்கள் காணாமல் போனது வெளிச்சத்துக்கு வந்தாலும், ஒரு மாநிலத்தை ஆளும் அரசே அப்பட்டமாக, ஆமாங்க எல்லா ஆவணங்களையும் அழித்து விட்டோம் என்று கூறுவது ஆணவம் அன்றி வேறு எதுவும் இல்லை...
ஆணவமாக கூறிய அரசு குஜராத்தை மட்டும் ஆண்டு கொண்டிருக்கிறது, கட்சியோ இந்தியாவை ஆளப் போகிறோம் என்று கனவு காண்கிறது...

குஜராத்தில் நடப்பதை குஜராத் மக்கள் மட்டும் பார்க்கவில்லை, மாறாக இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் பார்த்து கொண்டிருக்கிறார்கள்,

குஜராத் அரசை பற்றி யாராவது மட்டமாக பேசினால் அந்த மாநில மக்கள் குஜராத்தி ஒற்றுமையை கடை பிடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். தம்பி, குஜராத் என்னும் சிறிய வட்டத்தை விட்டு வெளிய வாங்க, உலகம் என்ற பெரிய வட்டத்துக்கு இப்ப போக வேண்டாம், இந்தியன் என்னும் இன்னும் ஒரு வட்டம் இருக்கு என்பதை மறந்து விடாதீர்கள்...

முஸ்லிம், இந்து, சீக்கியன், தமிழன், கன்னடன் என்று இன்னும் எத்தனை காலம் தான் பிரிந்து இருந்து அடிமையாக வாழ போகிறோமோ என்று தெரியவில்லை, ஆனால் இந்த நிலை மாற யாராவது வருவார்கள் என்று கனவு காணாமல், ஒவ்வொருவரும் முயற்சி எடுப்போம்...

ஒவ்வொருவரும் எனக்கு என்ன என்று இருந்தால், ஆப்பு கண்ணுக்கு தெரியும் பொழுது காலம் கடந்து போயிருக்கும்...

http://www.bbc.co.uk/news/world-south-asia-13970748