politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

11.12.11

சத்திய_சோதனை @ இந்தியா.காம்

சத்திய சோதனை என்ற தலைப்பில்  இந்த வருட ஏப்ரல் மாத இறுதியில் இணையத்தில் உலவும் கருத்துக்களை முடக்குவதற்கு The Information Act 2008 மாற்றம் கொண்டு வந்ததை குறித்து கொஞ்சம் தவறாகவே குறிப்பிட்டு இருந்தேன்...

இன்று கபில் சிபல் பேசிய பிறகு, இணைய உலகமே விழித்து கொண்டு உள்ளது... சுமார் எட்டு மாதங்கள் கழிந்த பிறகு தான் அந்த துறையின் அமைச்சருக்கே இணைய உலகில் உலவும் கருத்துக்களை முடக்குவதில் உள்ள சிரமம் எரிச்சலை கிளப்பி உள்ளது..

தோழர். புலவர். சா. ராமானுசம் பதிவர்களுக்கு சங்கம் அமைக்க முன்முயற்சி எடுப்போம் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

சில தோழர்கள் இந்த சட்டம் பதிவர்களுக்கு பொருந்தாது என்ற நினைப்பில் உள்ளதும் அந்த பதிவில் வந்த பின்னூட்டத்தில் தெரிய வந்துள்ளது. இந்த சட்டத்தில் மார்ச் மாத நடுப் பகுதியில் பதிவர்கள் குறித்து சரத்துக்கள் சேர்க்கப் பட்டு அவர்களின் பேச்சுரிமையை அடக்கவும் வழி வகை செய்யப் பட்டுள்ளது...

பதிவர்கள் எப்படி இந்த சட்டத்தில் நுழைக்கப் பட்டுள்ளனர் என்பதற்கான செய்திக் குறிப்பு...
http://chmag.in/article/may2011/cybercrimeopedia-new-rules-under-information-technology-act

http://www.drishtikone.com/blog/draconian-intent-government-india-new-it-act-rules-which-threaten-gag-bloggers

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதத்தில் 358 பதிவுகளை நீக்க வேண்டும் என்று இந்திய அரசு, பன்னாட்டு இணைய நிறுவனங்களிடம் வைத்த கோரிக்கையின் பட்டியல் இந்து நாளிதழின் செய்திக் குறிப்பில் உள்ளது

http://www.thehindu.com/opinion/editorial/article2698888.ece

இதன் மூலம் பாதிக்கப் பட்டவர் தான் நம் பதிவர் தோழர். ரெவெரி அவர்களும், அது குறித்த அவரின் பதிவு http://reverienreality.blogspot.com/2011/11/spam.html