
கொஞ்சம் உற்று பார்த்தால் தலைப்பே கதை சொல்லும்... இதோ இன்னுமொரு ஜனநாயக படுகொலை நடக்க போகிறது... பென்னாகரம் இடை தேர்தல் சொல்லும் சேதி என்ன? மக்கள் பணத்திற்காக தங்கள் ஓட்டு உரிமையையும் விற்கும் நிலைக்கு வந்து விட்டார்கள், ஆக இந்த அரசாங்கம் ஆனது லெனின் கூறுவது போல பணக்காரர்களை மட்டுமே காப்பாற்ற உருவாக்க பட்டது என்பது மறுபடியும் மறுபடியும் வெட்ட வெளிச்சம் ஆகி கொண்டிருக்கிறது... மல்லய்யா இதற்க்கு முன் எந்த தவறுமே செய்யாதவர் போலவும், அவசரத்திற்காக மட்டுமே விதிமுறைகளை மீறினார் என்றும் பரப்ப படுவது போலவே, நாளை பென்னாகரம் மக்கள் தங்களை விரும்பி தேர்ந்தெடுத்ததாக கதை விட போகிறார்கள்..
பணம் படைத்தவர்கள் செய்யும் தவறுகள் ஆதாரம் இருந்தும் அவர்கள் இறந்த பிறகே அவர்களுக்கு தண்டனை பிறப்பிக்க படும், ஆனால் சாதாரண மனிதன் ஆதாரம் இல்லை என்றாலும், நிரபராதியாகவே இருந்தாலும் சட்டத்தால் தண்டிக்க படுவான்... ஆக பழைய தமிழ் சினிமா டயலாக் படி, " இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்" என்று விட்டு விட முடியாது, மாற்றத்தை நோக்கி ஆணிவேர் ஊடுருவிக் கொண்டே இருக்கும் என்று இந்த பக்கத்தில் தெரிவித்து கொள்கிறேன்...