
சுரண்டப் பட்ட உழைப்பே லாபம் என்று சொன்ன அறிஞர் மார்க்ஸ் க்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை...
ஆனால் அவர் சொன்னது சரி என்று சொல்லும் அளவுக்கு நம் தமிழக முதல் அமைச்சர் முன்பு இரு விதமான வணிகர்கள் தெளிவு படுத்தி இருக்கிறார்கள்...
செங்கல் ஒரு லோடுக்கு 3000 ரூபாய் குறைப்பதாகவும்,
ஜல்லி கல் ஒரு லோடுக்கு 700 ருபாய் குறைப்பதாகவும் கூறியுள்ளனர்..
எந்த விதமான சலுகைகளும் கிடைக்காமல் இவ்வளவு தொகையை நாட்டின் நலன் கருதி குறைத்து கொள்வதாக கூறுவது பலத்த சந்தேகத்தை கிளப்புகிறது...
அப்படியே நாட்டின் நலன் கருதி குறைத்து கொள்வதை ஏற்றுக் கொண்டாலும் இத்தனை நாளாய் அதிக லாபத்திற்கு விற்றுள்ளது வெளிச்சத்திற்கு வருகிறது...
திடீர் என்று ஏன் குறைக்கிறார்கள் என்ற சந்தேகம் அனாதையாய் நிற்கிறது...
http://thatstamil.oneindia.in/news/2011/07/14/brick-jalli-rates-come-down-after-jaya-order-aid0136.html