politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

31.12.11

2011 லிருந்து 2012...

கடைசி இரு வாரங்கள்...
நாடகத்தின் உச்ச கட்டம் அரங்கேறிய நாட்கள்...

கூடங்குளம் குறித்து பிரதமர் உறுதி.

கூடங்குளம் கண்டிப்பாக திறக்கப் படும் என்றும், ஏதாவது ஆபத்து என்றால் ரஷ்ய நிறுவனம் பொறுப்பேற்காது என்றும் பிரதமர் கூறியதும்..

முல்லைப் பெரியாறு விவகாரம்.

இரு மாநில மக்களின் ஒற்றுமையை குலைத்த சங்கதி, காங்கிரஸ் நிர்வாகிகளிடமே ஒற்றுமையை குலைத்த விவகாரம், பல்வேறு பிரச்சினைகளை மக்களின் மனதில் இருந்து நீக்கிய சமாச்சாரம்

லோக் பால் மசோதா.

ஊழலை ஒழிக்க சட்டம் கொண்டு வருவது என்பது, திருடனை கூப்பிட்டு காவலுக்கு உட்கார வைப்பது போன்றது என்று உணர்த்திய நிகழ்ச்சி... தனக்கு தேவையான சரத்து லோக் பால் மசோதாவில் உள்ளது என்று தெரிந்ததும், உண்ணாவிரதத்தை கைவிட்ட அண்ணா ஹஜாரே.. காங்கிரஸ் அரசின் கையாலாகா தனத்தை தோலுரித்து காட்டிய நள்ளிரவு நாடகங்கள்.

மன்னார்குடி குடும்பத்தினர் நீக்கம்.

நகமும் சதையுமாக இருந்த உடன்பிறவா சகோதரிகளின் பிரிவு, ஏன் என்று எழுந்து நிற்கும் கேள்வியுடன் மொத்த பிரச்சினைகளும் மறந்த நிலை.

எதிர்பார்ப்புடன் தொடங்கிய ஆண்டு, அலைக்கற்றை ஊழல் புயலில் சிக்கி, தமிழகத்தில் தானே புயலில் முடிந்திருக்கிறது...

அடுத்த ஆண்டிலும் எந்த வித மாறுதலும் இருக்க போவதில்லை என்று அறிவு சொன்னாலும், நம்பிக்கை தானே வாழ்க்கை என்று புத்தி சொல்கிறது...

ஆகவே ஆங்கில புத்தாண்டை இனிதே வரவேற்று முடிந்த வரை தோய்வில்லாமல் மீண்டும் எழுத முயற்ச்சிக்கிறேன் என்று உறுதி சொல்கிறேன்...