politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

9.12.11

தண்ணீர் - வெள்ளம்

முல்லை பெரியாறு அணை...

தமிழகத்திற்கு நீர் வரத்து இல்லை என்றால் தமிழக விவசாயிகள் பாதிக்கப் படுவார்கள்..

அணை உடைந்தால் கேரளா மக்கள் பாதிக்கப் படுவார்கள்.

கேரளா அரசு அணை கட்டி தருகிறேன் என்று சொல்வதை காது கொடுத்து கேட்டால் தமிழகத்திற்கு நீரே கிடைக்காது..

அதே சமயம் தமிழக அரசும் இந்த அணையின் உறுதியின் மீது நம்பிக்கை வைத்து இது உடையவே உடையாது என்று அடித்து சொல்வது ஏற்புடையதும் அல்ல...

தமிழக அரசே தமிழகத்திற்கு நீர் கிடைக்கும் வகையில் புதிய அணை கட்ட வேண்டும்.. ஆனால் அது மாதிரி முனகல் கூட எழவில்லை என்பது வருத்தத்துக்கு உரியது..

நதி நீரை தேசிய மயமாக்குவது மட்டுமே பிரச்சினைக்கு முடிவு என்று கூறுவது மத்திய அரசின் ஓட்டு அரசியலுக்கு சாதகமாகவே முடியும்.

பிரவோம் என்ற எர்ணாகுளத்தில் உள்ள தொகுதிக்கு இடைத் தேர்தல் வர இருப்பதாலும், இரு கட்சிகளின் தலைவர்கள் மீதும் ஊழல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாலும் மக்கள் கவனத்தை திசை திருப்ப கேரள அரசியல்வாதிகள் முயற்சி செய்கின்றனர்.

பல்வேறு கட்ட விலைவாசி உயர்வும், தமிழகத்தில் நிலவும் அசாதரணமான மக்கள் விரோத ஆட்சி குறித்த பதிவுகள் மக்கள் மனதில் இல்லாமல் இருக்க தமிழக அரசியல்வாதிகள் இந்த பிரச்சினையை கையாளத் தெரியாமல் கையாள்கின்றனர்.

இந்த சூழ்நிலையை பயன் படுத்தி சந்தர்ப்ப வாதிகள் தங்களுக்கு தேவையானதை செய்து கொள்ள முடியும்..
தமிழக பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடலாம், தமிழர்களின் பொருட்களை சூறையாடலாம், மலையாள கடையை அடித்து நொறுக்கி கொள்ளை அடிக்கலாம், அல்லது மலையாள பெண்கள் மீதும் வன்முறையில் ஈடுபடலாம்..

தமிழனை அடித்து விட்டான் மலையாளி என்றும், மலையாளியை அடித்து விட்டான் தமிழன் என்றும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு ஆளும் வர்க்கத்தின் இனவெறி அரசியலுக்கு பலி ஆகாமல் சற்று நிதானமாக யோசித்து நாம் அனைவரும் ஒற்றுமையாய்  நலமாக வாழ சரியான வழியை நிபுணர்கள் முன்வைத்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்...

ஒன்றை மற்றும் நினைவில் கொள்ள வேண்டும்... பணக்காரர்களுக்கு இரு மாநில காவல் துறையும் பாதுகாப்பு கொடுக்கும்.. இந்த பிரச்சினையில் பாதிக்கப் படப் போவது பெரும் பணக்காரர்கள் அல்ல, கஷ்டப் படும் உழைக்கும் வர்க்கமே.

http://www.asianage.com/india/opposition-will-raise-funds-build-new-dam-achuthanandan-272

இது சம்பந்தமாக கேரளா மக்கள் தயாரித்த வீடியோ வும், அதற்க்கு பதில் கொடுத்து தமிழக முன்னாள் பொறியாளர்கள் தயாரித்த வீடியோ வும் இந்த பக்கத்தின் கடைசியில் உள்ளது