politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

8.12.11

அந்நிய மூலதனம் - நிலைமையை சீராக்குமா?

அந்நிய மூலதனம் சில்லறை வர்த்தகத்தில் நுழையும் பொழுது விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றும், மக்களுக்கு விலை குறைவாகவும் தரமாகவும் பொருட்கள் கிடைக்கும் என்றும் கூறப் படுகிறது...

அந்நிய மூலதனம் உள்ளே வருவதால் யார் யாருக்கு என்ன என்ன பிரச்சினை வரலாம் என்று பார்ப்போம்..

முதலில் ஒரு பொருளை விற்பனை செய்ய தேவைப் படும் விற்பனை பிரதிநிதி வேலை இழப்பான்.. ஒரு பொருளை மொத்தமாக ஒரே இடத்தில் வாங்கும் பொழுது, அந்த பொருளை விளம்பரப் படுத்தவோ அல்லது ஆர்டர் எடுக்கவோ தேவை இல்லை என்பதால் பல விற்பனை பிரதிநிதிகள் வேலை காலி..

இரண்டாவது பல சிறிய சில்லறை வியாபாரிகள் கடையை மூட வேண்டியது தான்.. அவர்களிடம் சர்வீஸ் சரியில்லை என்று கூறுவீர்களேயானால், நீங்கள் தொடர்ந்து அதே வியாபாரியிடம் வாங்கும் பட்சத்தில் அவர் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைக்க தவறுவதில்லை... என்னை பொறுத்தவரை இதை பெரிய கடைகளில் எதிர் பார்க்க முடியாது... நிச்சயம் சில்லறை வணிகர்கள் அழிந்து விட மாட்டார்கள், அவர்களின் எண்ணிக்கை குறைந்து விடும். நேர்மையான கடைகளும், மக்களிடம் நம்பிக்கை பெற்ற நட்பான கடைகளும் அழியாது..

மூன்றாவது பாதிக்கு மேல் கொள்முதலை வெளிநாடுகளில் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளதால் உலகம் முழுவதிலும் கால் பதித்து வைத்திருக்கும் அந்நிய நிறுவனங்கள் பெரும்பாலும் விலை குறைவாக உள்ள பகுதிகளில் கொள்முதலை ஆரம்பிப்பார்கள்.. அப்பொழுது உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப் படுவார்கள்... நம் நாட்டில் நூல் விலை உயரும் பொழுது வெளிநாட்டில் இப்பொழுது இருக்கும்  முதலாளிகள் இறக்குமதி செய்யவில்லையா என்ற கேள்வி வருகிறது... அந்த நேரத்தில் வெளிநாட்டில் இருந்து நூல் இறக்குமதி செய்வதை தடை செய்ய கோரி போராட்டம் நடந்து நிலைமை சீரானது. ஆனால் அந்நிய முதலாளிகளுக்கு கதவை திறந்து விட்ட பிறகு தடை போட முடியாது என்பதே நிதர்சனம்..

நான்காவது பெரும்பாலான இந்திய பணம், அந்நிய நிறுவன நாடுகளின் பணமாக மாறி விடும் பட்சத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைய ஆரம்பிக்கும். இது சில அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கு வித்திடும் என்பது கண்கூடு...
உதாரணம் தற்பொழுது இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதால் பெட்ரோல்  விலை உயர்வது கண்ணால் கண்டு விட்டோம்.

செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, விலை ஏற்றம் செய்ய எதுவாக மொத்த கொள்முதல் நடக்கும். அப்பொழுது வெளி மார்கெட்டில் கிடைக்கும் விலையை விட இந்த அந்நிய நிறுவனங்களின் பொருள் குறைந்த விலையில் விற்றாலும் அதிக லாபம் பெற ஏதுவாகும்...

இன்னும் முன் பெற வர்த்தகம் மூலமாகவும் விலையை நிர்ணயிப்பதில் வாய்ப்புள்ளதாக என் கணிப்பு. ஏற்கனவே நம் நாட்டு முன்பேர வர்த்தகத்தில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருவது நாம் அறிந்ததே.. தற்பொழுது திடீரென்று சர்க்கரை உற்பத்தி நம் நாட்டில் உபரி உற்பத்தி ஆனதால், அதை ஏற்றுமதி செய்வது என்று இந்திய அரசு முடிவெடுத்ததால் சர்வதேச முன்பேர வர்த்தகத்தில் சர்க்கரை விலை குறைந்தது என்றும் இதனால் வெளிநாட்டு வர்த்தகர்கள் நஷ்டத்தை சந்தித்தார்கள் என்றும் செய்திக் குறிப்பு சொல்கிறது...

கீழே உள்ள படத்தை சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்..



ஆக இனி அப்படி ஏதாவது அதிக உற்பத்தி நடக்கும் பட்சத்தில் அந்நிய நிறுவனங்கள் உள்நாட்டில் அதை வாங்கி முடக்கி வைத்து முன்பேர வர்த்தகத்தில் விலை குறையாமல் பார்த்துக் கொள்வார்கள்..

சர்க்கரை குறித்து நமக்கு என்ன கவலை, நம் நாட்டிலே தான் ரேஷன் கடைகள் அருமையாக இருக்கிறதே என்பவரா நீங்கள்..
உங்களுக்காகவே அரசு உணவு பாதுகாப்பு மசோதா என்று ஒன்றை உருவாக்கி ரேஷன் கடைகளை அழிக்க கிளம்ப போகிறது...

தற்பொழுது உள்ள சில்லறை வணிகம் அழுகிய நிலையில் தான் உள்ளது, ஆனால் அதை சீராக்க முயற்சி செய்யாமல்... எவனோ ஒரு வெளிநாட்டுக் காரன் வந்து சரி செய்வான் என்று நம்புவது எந்த விதத்தில் சேர்ப்பது என்று தான் தெரியவில்லை