politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

14.12.11

இடுக்கியும் இடிந்தகரையும்

கூடங்குளம் போராட்டமும், முல்லைப் பெரியார் அணை போராட்டமும் ஏறக்குறைய ஒரே அடிநாதம் கொண்டது தான்...இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை, பூகம்பம் வந்தால் என்னாகும் என்ற பயம் தான்...


இடிந்தகரையும் சரி, இடுக்கியும் சரி  பூகம்ப சோன் மூன்றில் தான் வருகின்றன...

இரண்டு இடத்திலுமே பூகம்பம் ஆறு ரிக்டர் அளவுக்கு மேல் வந்தால், மனித உயிர் இழப்பு என்பது அபிரிமிதமாக இருக்கும்...

[இடுக்கியில் பாதிப்பு வராது என்று கூறுபவர்களுக்கு - ஆறு ரிக்டருக்கு மேல் பூகம்பம் வந்தால், முல்லை பெரியாறு அணை மட்டும் அல்ல... இடுக்கி அணையும் உடைய வாய்ப்புள்ளது என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். விவசாய சங்க தலைவர் ஒருவர் கேட்டதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன், கேரளா அரசு கட்டப் போகும் அணை மட்டும் பூகம்பம் வந்தால் இடியாதா?]

அப்துல் கலாம் அவர்கள் கூடங்குளம் பகுதியில் பூகம்பம் வரவே வராது என்று ஆரூடம் சொன்னார். மேலும் ராஜ ராஜன் கட்டிய அணையே இன்னும் வலுவாக இருக்கிறதே என்று மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டார்...

விஷயம் என்ன என்றால்,

நேற்று அப்துல் கலாம் அவர்கள், முல்லைப் பெரியாறு அணையை பலப் படுத்த ஆலோசனை கூறி உள்ளார்... இது சரியான ஆலோசனையாக இருந்தாலும், கூடங்குளத்திற்கு ஒரு பார்வை என்றும்... முல்லைப் பெரியாறுக்கு ஒரு பார்வை என்றும் இருப்பது நியாயமா?

இடிந்த கரையில் பூகம்பம் ஆறு ரிக்டருக்கு மேல் வராது என்றால் இடுக்கியிலும் ஆறு ரிக்டருக்கு மேல் வரப் போவதில்லை..

எப்பொழுதோ கட்டிய கல்லணை பலமாக இருக்கிறது என்றால், அதற்க்கு பிறகு கட்டிய முல்லை பெரியாறு அணை கூட பலமாக தானே இருக்கும்...

இவ்வளவு பேசிய அப்துல் கலாம் அவர்கள் நதிநீரை இணைப்பது குறித்தும், ஆறுகளை தேசிய மயமாக்குவது குறித்தும் பேசி இருக்கலாம்.. [இன்று மாலை வெளியான செய்திக் குறிப்பில் இந்த ஆலோசனையையும் குறிப்பிட்டுள்ளார், அப்துல் கலாம் அவர்கள்]

இடுக்கியில் பாதிப்பு வந்தால் இப்பொழுது வாழ்பவர்களுடன் உயிரிழப்பு முடிந்து விடும்.. கூடங்குள பகுதியிலோ தப்பி பிழைத்தவர்களும் இனி பிறக்கப் போகிறவர்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதை மீண்டும் நினைவுப் படுத்துகிறேன்.

மக்களின் பயத்தை போக்க அப்துல் கலாம் கூறிய ஆலோசனை பரிசீலிக்கப் பட வேண்டியது தான்.. அதே நேரத்தில் கூடங்குள மக்கள் போராட்டத்தையும் கலாமை ஆதரிப்பவர்கள் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்று கூறிக் கொள்கிறேன்.

உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவால் சிறிது நாட்கள் நாம் மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தலாம் என்பது தான்  நிதர்சனம்...

http://tamil.oneindia.in/news/2011/12/13/tamilnadu-army-can-maintian-protect-dams-kalam-writes-pm-aid0128.html

http://www.mapsofindia.com/maps/india/seismiczone.htm