politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

20.9.10

நீயா நானா?

நீயா நானா என்னும் நிகழ்ச்சியில் இன்று நம் செயல்களை தீர்மானிப்பது விதியா? அல்லது இயற்கையா என்னும் அரத பழசான ஒரு கேள்வியை கேட்டு நோகடித்தார்கள். அதில் ஒருவர் மட்டும் தெளிவாக ஆன்மீகத்தையும் விதியையும் தனி தனியாக பார்க்கிறேன் என்று விதி என்ற ஒன்று இல்லவே இல்லை என்று சாதித்து விவாதத்தில் வென்றார்.
ஆனால் அவர் பார்க்க மறுத்த மறு பக்கம் என்ன வென்றால் விதி என்ற ஒன்று இல்லை என்றால் கடவுள் என்ற ஒன்று இல்லை என்று தான் அர்த்தம்.
அது போகட்டும் ஒரு நாள் இதை பற்றி தெளிவாக தெரிந்து கொண்டு அவர் மேலும் இவ்வுலகத்தில் மண்டி கிடக்கும் இது போன்ற பல மூட நம்பிக்கைகளை ஒழிப்பார் என்று நம்புவோமாக...