politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

12.11.11

நிபுணர்

இன்று இணையத்தில் மிகப் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறார், நமது முன்னாள் ஜனாதிபதி...

அவர் வெளியிட்ட அறிக்கையில் ஒரு பொய்யை ஏற்கனவே ஒரு பதிவில் ஆணிவேர் அம்பலப் படுத்தி உள்ள நிலையில் இன்று வெளி வந்துள்ள ஒரு செய்தி இன்னும் ஒரு பொய்யை அம்பலப் படுத்தி உள்ளது அணு ஆற்றல் கட்டுப்பாட்டு குழு [Atomic Energy Regulatory Board].

அதாவது ஏற்கனவே இருக்கும் பாதுகாப்பு திட்டங்களுடன், நடமாடும் தன்மை உள்ள மின்சார உற்பத்தி கருவியும், நீர் நிலையமும் இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளுக்கும் அமைக்கப் பட வேண்டும் என்று கூறியுள்ளனர்...

இது கூடங்குளத்திர்க்கும்  பொருந்தும் என்பதால் நூறு சதவிகித பாதுகாப்பு உள்ளதாக நம் முன்னாள் ஜனாதிபதி எவ்வாறு கூறினார் என்று சாதாரணமாகவே கேள்வி எழும்புவதை, மேலும் பாதுகாப்பு இருப்பதில் தவறில்லையே என்று பதில் அளித்திருக்கிறார் நம் முன்னாள் ஜனாதிபதியின் உதவியாளர்.

மேலும் இங்கு தோய்வில்லாமல் நடக்கும் போராட்டத்திற்கு எங்கிருந்து பொருளுதவி வருகிறது என்று மத்திய அரசு விசாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் சொல்கின்றனர்...

விஞ்ஞானி என்றால் தான் ஒரு விஞ்ஞானியை விமர்சிக்க வேண்டும் என்றால்,
பொருளாதார நிபுணர் என்றால் தான் ஒரு பொருளாதார நிபுணரை விமர்சிக்க முடியுமா என்று கேள்வி எழும்புகிறது...

விலைவாசியை கட்டுப் படுத்த முடியாது என்றும், பணம் மரத்திலா காய்க்கிறது என்றும் கேட்ட நம் பிரதமர், பொருளாதார மேதை தானே...

http://ibnlive.in.com/news/kudankulam-protesters-demand-white-paper/201771-3.html