politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

15.6.11

ஓட்ட பந்தயத்தில் இருந்து விலகி...


இத்தனை ஆண்டு காலமாய் நம் கல்வி அமைப்பு, மாணவர்களை வாழ்க்கை என்னும் ஓட்ட பந்தயத்தில் ஓட வைத்து கொண்டிருந்தது..
அம்மாவின் நல்ல ஆட்சி முறை(?) இந்த ஓட்ட பந்தயத்தில் இருந்து விலகி மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு உறுதுணை நிற்கிறது...
நம் ஆசிரியர்களின் திறமை தான் வரப் போகும் மூன்று வாரங்களுக்கு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் படப் போகிறது..
ஆசிரியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கிறார்களா அல்லது என்ன பாடம் எடுப்பது என்று குழம்பி நிற்கிறார்களா என்பது வெளிச்சத்துக்கு வரும்...
ஒவ்வொரு மாணவனும் தன் ஆசிரியரின் திறமையை இந்த மூன்று வாரங்களுக்குள் எடை போட்டு விடுவான்.. ஆகையால் உங்கள் திறமைகள் அனைத்தும் பயன்படுத்தி உங்கள் மாணவனின் நம்பிக்கைக்கு பாத்திரமாகுங்கள்...

[குறைகளை மட்டுமே எழுதுகிறீர்கள் என்று கூறியவர்கள் இந்த கட்டுரைக்கு ஏன்டா இதில் உள்ள குறைபாட்டை எழுதவில்லை என்று கடிந்து கொள்வார்கள்... நான் செய்ய வேண்டிய வேலையே ndtv யே செய்து விட்டதால் வேறு மாதிரி எழுத வேண்டியதா போயிடுச்சு]

http://www.ndtv.com/article/india/the-jayalalithaa-effect-students-left-without-books-112336