politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

9.6.11

09 06 2011


இன்று
மைசூரில் யானையின் அட்டகாசம்...
நீர் யானையின் பிரசவம்...
சோனம் கபூருக்கு பிறந்த நாள்..
ஹுசைன் ஓவியரின் மரணம்
மாருதி நிறுவனத்தில் வேலை நிறுத்தத்தால் 270 கோடி நஷ்டம்...
hcil மற்றும் mtnl நிறுவனங்களில் மத்திய புலனாய்வு துறை விசாரணை..
திகார் ஜெயிலில் உள்ள தன் நிறுவன மேலாளரை சந்தித்தார் அணில் அம்பானி...
கூடா நட்பு எது என்று புலனாகுமா?
மேற்கு இந்திய தீவுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி..
ஒலிம்பிக் வீரர்களை தயார் செய்து அழைத்து செல்ல 258 கோடி ஒதுக்கீடு..
என்று எண்ணற்ற செய்திகள் இருந்தாலும் ,
இன்று அனைவர் கவனத்தையும் கவர்ந்தது என்னவோ அம்மாவின் பொருளாதார தடை விதிக்கும் தீர்மானம் தான்...
தோழர் சௌந்தரராஜன் ஈனஸ்வர குரலில் பொருளாதார தடையால் தமிழன் படப் போகும் வேதனையை பதிவு செய்தாலும் எங்கே துரோகி என்று முத்திரை குத்தப் படுவோமோ என்று அனைவரும் ஒரு மனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பது என்ன நலன் பயக்கும் என்னும் சிந்தனை தான் என் மனதில் இன்று காலையில் இருந்து ஓடி கொண்டிருக்கிறது...
நல்லது நடந்தால் சரி தான்...
இழப்பதற்கு இனிமேல் என்ன இருக்கிறது என்ற எண்ணமே நம் சகோதர தமிழனிடம் மேலோங்கி இருக்கும் என்பது தான் உண்மை...

http://www.hindustantimes.com/NSA-calls-on-Jayalalithaa/Article1-707632.aspx