politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

17.6.11

முழு பூசணிக்காய்..

[நன்றி- போட்டோ ஆதாரம் தி ஹிந்து நாளிதழ்]


ராம்தேவ்
அவர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார் என்று இந்திய முழுவதுக்கும் தெரிந்திருக்கிறது.. ஆனால் டெல்லி காவல் துறைக்கு தெரியவில்லை...
ஒரு லட்சம் பேருக்கு மேல் கூட போகிறார்கள் என்று ராம்தேவ் பல ஊடகங்களில் சவால் விட்டார்... இந்தியாவுக்கு தெரிந்த இந்த ரகசியம் டெல்லி காவல் துறைக்கு தெரியவே தெரியாதாம்...
சட்டத்திற்கு புறம்பாக இவர்கள் இப்படி கூடியிருப்பது, காலையில் இருந்து தெரியாமல் இரவு தான் தெரிந்ததாம், ஆகையால் கலைந்து செல்லுமாறு ஒரு மணிக்கு காவல் துறை ராம்தேவுக்கு கோரிக்கை வைத்ததாம்.. ஆனால் அதை மறுத்து விட்டாராம்...
வேறு வழியில்லாமல் யாரையும் அடிக்காமல் அன்பாக பேசி தான் கலைந்து செல்ல வைத்தார்களாம்...
கூட்டத்தில் இருந்த சிலர் தாக்குதலில் இறங்கியதால் வேறு வழியில்லாமல் எட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க வேண்டியதாக போய்விட்டதாம்... அதுவும் சட்டத்திற்கு உட்பட்டே நடந்ததாம்...

அப்படி என்றால்,
ராம்தேவின் சீடர்களை காவல்துறையினர் அடித்தது புகைப்படமாக பல நாளிதழ்களில் வெளியானது யார் செய்த வேலை?
டெல்லி மருத்துவமனையில் ராஜ் பாலா என்ற அம்மையார் முதுகில் பட்ட அடியாள் மூச்சு பேச்சில்லாமல் 17 நாட்களாக இருக்கிறாரே அது யார் செய்த சதி...?

http://articles.timesofindia.indiatimes.com/2011-06-15/delhi/29661152_1_critical-condition-ventilator-support-baba-ramdev

அப்படி என்றால், டெல்லி காவல்துறைக்கு எதிராக எதோ சதி ஒன்று நடத்தப் படுகிறது... அதை கண்டுபிடிக்க ராணுவத்தை வரவைங்கப்பா...

http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=5216039