politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

14.6.11

மனித பரிமாணத்தின் தவறு..


குரங்கு மனிதனாக பரிமாண வளர்ச்சி அடைந்த பொழுது ஒரு சிறு தவறு நேர்ந்து விட்டது, அந்த தவறு சிந்திக்கும் ஆற்றல்...
இன்று மாலை வெளியான செய்திகளில் ஊடகங்கள் உச்சநீதிமன்றத்தின் சமச்சீர் கல்வி குறித்தான தீர்ப்பை வெளியிட்டிருந்தது...
நாளை பள்ளிக்கூடம் திறக்கப் போகிறதே, என்னடா தீர்ப்பு வரும் என்று காத்திருந்தால் இன்னும் பல விதத்தில் நம்மை சிந்திக்க விட்டு மண்டையில் கொஞ்சமாக ஒட்டிக் கொண்டு இருக்கும் முடியையும் பிடுங்கி எடுத்து விடுவார்கள் போலிருக்கிறது...

இந்த வருடம் ஒன்றாம் வகுப்புக்கும் மற்றும் ஆறாம் வகுப்புக்கும் சமச்சீர் கல்வி தொடர வேண்டுமாம்... மற்ற வகுப்புகளுக்கு என்ன செய்வது என்று குழு ஒன்றை அமைத்து ஆராய வேண்டுமாம்...

நம்ம கேள்வி என்னன்னா? ஏற்கனவே போன வருடம் ஒன்றாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் சமச்சீர் கல்வியில் பயின்ற மாணவர்கள், இந்த வருடம் இரண்டாம் வகுப்புக்கும் ஏழாம் வகுப்புக்கும் படிக்க செல்லும் பொழுது சமச்சீர் அல்லாத கல்வியை படிப்பார்களா? அல்லது மீண்டும் ஒன்றாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலேயே உக்கார்ந்து கொள்வார்களா?

நம் கேள்விக்கு எந்த ஊடகமும் இது வரை பதில் தரவில்லை, பதில் பெறவும் முயற்சிக்கவில்லை என்பதும் புரிகிறது...

என்ன நடக்குதுன்னு நாளை பாக்கலாம்...

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=431701&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=


http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=38562&id1=12

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1106/14/1110614030_1.htm