politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

7.6.11

சறுக்கல்...


கடமையிலிருந்து சறுக்க கூடாது என்பது மனிதன் வகுத்த நீதிபோதனை...
ஒரு மதவாதியின் கடமை என்பது அரசை மக்களின் கோபத்திலிருந்து காப்பாற்றுவது மட்டுமே என்பது நம்ம ராம்தேவ் பாபாவுக்கு மறந்து விட்டது..
அவர் அரசை காப்பாற்றுவதை விட்டு விட்டு அரசுக்கு எதிராய் திரும்பும் பொழுது அரசு தன் பொது எதிரியாய் அவரை கருதுவது தான் ஜனநாயகம் என்று பொருள் படுகிறது...
ஒருவன் தவறு செய்கிறான் என்று எத்தனையோ முறை எத்தனையோ பேர் கூக்குரல் எழுப்பியும் மௌனம் சாதித்து விட்டு, தாங்கள் எதிர்பார்த்தது நடக்க வேண்டும் என்று சிவப்பு கம்பளம் வரவேற்ப்பு கொடுத்து அழைத்து வந்து, முதுகில் குத்து வாங்கும் பொழுது அரசுக்கு மதம் பிடிக்காமல், மதம் பிடித்து விடுகிறது... [மதம், இரண்டு அர்த்தமாக வருவதால் இந்த குழப்பம்...]
நீங்கள் தவறு செய்பவர்களை கண்டுபிடியுங்கள், அதே சமயத்தில் இத்தனை நாளை அவரை கண்டு கொள்ளாமல், மெத்தனமாக தவறு இழைக்க வைத்ததும் பெரிய ஊழல் தான் என்பதையும் ஒப்பு கொள்ளுங்கள்...

ஊழலை கண்டு கொள்ளாமல் விடுவதும் ஊழல் தானே? கரெக்டா?

http://profit.ndtv.com/news/show/enforcement-directorate-to-probe-ramdev-funds-158913