politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

15.6.11

மனசாட்சியை அடகு வைப்போம்..


இன்று இந்திய சமுதாயத்தில் பணம் ஆட்சி செய்வதால், அவரவர்களும் மனசாட்சியை கழற்றி போட்டு விட்டு பயணம் செய்து கொண்டிருக்கின்றனர்...

என்றோ ஒரு முறை, என் நண்பன் என்றோ ஒரு நாள் அனுப்பிய குறுஞ்செய்தியை... கீழே குறிப்பிட்டுள்ளேன்

( ~_~ )

( ~_~)

( ~_~ )

( ~_~ )

ஏரியா புல்லா அவன தான் தேடிகிட்டு இருக்கேன்...B.Pharm படி தம்பி செம ஸ்கோப் நு சொன்னான்..

மருந்து ஆய்வாளர் பதவிக்கு, 2008 ஆம் ஆண்டு தேர்வு செய்தனர். தமிழகத்திற்கு மட்டும் 24 பதவிகளுக்கு மட்டும் ஆள் எடுத்தனர், அதற்கு மட்டும் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டோர் தேர்வு எழுதியிருப்பார்கள்... இது ஒரு சாம்பிள் மட்டுமே... நாடு முழுவதும் இது போல் பல்லாயிரக் கணக்கான காலி இடங்கள் உள்ளன, ஆனால் ஆள் மட்டும் எடுப்பதில்லை... மருந்துகளை சோதனை செய்ய முறையான ஆட்களும், சாதனங்களும் குறைவு என்பதால் போலி மருந்து வியாபாரம் பிரமாதமாக இயங்கி கொண்டிருக்கிறது...

மருந்து துறையில் பிரம்மாண்டமான மாற்றம் உருவாகும் வரை இந்த துறையில் குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும்... அது வரை, எந்த மருந்து கடையில் வாங்கினால் நல்ல மருந்து கிடைக்கும் குழம்பி திரிவது தான் மக்களின் வாழ்கையாய் இருக்கும்...

http://timesofindia.indiatimes.com/city/delhi/Spurious-medicines-worth-Rs-42L-seized/articleshow/8856228.cms