politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

8.8.11

அறியாமை போர்வை விலக..

பொதுவுடைமை கட்சியினர் மீது ஜால்ரா அடிக்கும் தன்மையை கேள்வி கேட்டால் ஊடகங்கள் சரியான செய்திகளை வெளியிடுவதில்லை என்று பூசி மெழுகி விடுவார்கள்... இது தொண்டர்களை சமாதானப்படுத்த இவர்கள் தயாராக வைத்திருக்கும் பதில்... 

எது எப்படியோ... 

தோழர்.காரத் கொடுத்த பேட்டி ஒன்றில் நமது மரியாதைக்குறிய(?) பிரதமர் மேல் நேரடியாக குற்றம் சாட்ட முடியாதென்றும், அவர் ஊழல்கள் நடக்கும் பொழுது வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தது தான் குற்றம் என்றும் அவர் கூறியுள்ளார்... கே ஜி எரிவாயு படுக்கை ஊழலும், இஸ்ரோ ஊழலும் பிரதமர் நேரடியாக கலந்திருப்பது அவரது நம்பகத்தன்மையை தெளிவாக உடைத்து எரிகிறது.. அப்படி இருந்தும் அவரது நம்பகத்தன்மையை கேள்வி கேட்க முடியாது என்று கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பது ஆகும்...

பொதுவுடைமை சிந்தனை படி ஊழலை ஊக்குவிப்பதே முதலாளித்துவம் தான், முதலாளித்துவ சித்தாந்தம் உள்ள ஒரு அரசு ஊழலின் அடிப்படையில் தான் அமைகிறது என்பது மார்க்சிய தத்துவம்.. அப்படிப்பட்ட சூழலை உடைத்து வெளியிடாமல் மூக்கை தொடுவது, வங்காளத்தில் மீண்டும் அக்கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை காட்டுகிறது... வங்காளம் என்று குறுகிய நோக்கில் தான் இவர்கள் பார்வையும் இருக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது... 

குஜராத் என்று குறுகிய நோக்கு பார்வையுடன் முன்னேறிய பா.ஜ.க வினர் தேசிய கட்சி என்ற அந்தஸ்த்தை இழந்து கொண்டு வருகின்றனர்... ஏற்கனவே ஒரு சில மாநிலங்களில் மட்டுமே வலுவாக உள்ள பொதுவுடைமை கட்சியினர் இத்தகைய நடவடிக்கையால் அங்கேயே முடங்கி கொள்ள போகிறார்கள் என்பது தெரிகிறது.. 

காரத்தின் பேட்டியில் நான் தேடியது எங்காவது டாடாவையும் அம்பானியையும் இவர் சந்திக்கு இழுத்திருக்கிறாரா என்பது தான்... வங்காள அரசுக்கும் டாடா நிறுவனத்திற்கும் நடுவில் போடப் பட்ட ஒப்பந்தமே வெளிப்படையாக தெரிவிக்காதவர்கள், பெரிய நிறுவனங்களை சந்திக்கு இழுப்பார்கள் என்பது சாத்தியம் அல்ல என்பது தெரிகிறது..

பொதுவுடைமை என்ற போர்வையில் முதலாளித்துவம் உறங்கி கொண்டிருப்பது தெளிவாகிறது... இதை எதிர் கொள்ள அனைவரும் சற்று பொதுவுடைமை கொள்கைகளை பற்றி சிறிதளவேனும் தெரிந்து கொண்டால் நம் மீது படர்ந்திருக்கும் அறியாமை போர்வை விலகி விடும்....